சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு இணையாக தங்கள் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது பாமக. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதி கட்சிகளை ஒன்று திரட்டி சமூக ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இதன் சார்பில் இதுவரை 10 வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்தது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பாமக மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் பாமக பொதுக்குழுவில் பாஜகவை பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் பாஜகவை விமர்சிக்கவில்லை. ஆனால் காடுவெட்டி குரு மட்டுமே, மோடி அலைவீசவில்லை என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பான பாமகவின் இந்த நீண்ட மெளனத்தின் பின்னணியே சீட் பேரம் என்றுதான் கூறப்படுகிறது. அதாவது பாஜக அணியில் தேமுதிக இடம்பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அதே நேரத்தில் அந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிபந்தனையாம்.
இந்த நிபந்தனையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவை சீண்டாமல், கூட்டணி பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறதாம் பாமக.
தமிழகத்தில் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது பாமக. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதி கட்சிகளை ஒன்று திரட்டி சமூக ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இதன் சார்பில் இதுவரை 10 வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்தது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பாமக மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் பாமக பொதுக்குழுவில் பாஜகவை பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் பாஜகவை விமர்சிக்கவில்லை. ஆனால் காடுவெட்டி குரு மட்டுமே, மோடி அலைவீசவில்லை என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பான பாமகவின் இந்த நீண்ட மெளனத்தின் பின்னணியே சீட் பேரம் என்றுதான் கூறப்படுகிறது. அதாவது பாஜக அணியில் தேமுதிக இடம்பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அதே நேரத்தில் அந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிபந்தனையாம்.
இந்த நிபந்தனையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவை சீண்டாமல், கூட்டணி பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறதாம் பாமக.