குஜராத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நமீதாவுக்கு ஆரம்பத்தில் படங்கள் குவிந்தது. தனது பம்ளிமாஸ் உடம்பை காட்டி நடித்தார். ரசிகன் ரசித்தான். உடம்பு இன்னும் குண்டாகவே ரசிகனுக்கு பிடிக்கவில்லை. இதனால் படங்களும் கிடைக்கவில்லை. காது குத்து, கல்யாணம், கடை திறப்பு, டி.வி.ஷோக்களில் மார்க் போடுவது என்ற சைடு பிசினசில் கொஞ்சம் காசு சம்பாதித்தார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் பிசினசில் முதலீடு செய்திருக்கிறார். இப்போது அடுத்து அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து தமிழக மக்களுக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறார்.
ஒரு கடைதிறப்புக்காக திருச்சிக்கு சென்றவரிடம், நிருபர்கள் அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்டனர் அதற்கு பதில் அளித்த அவர் "வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்டாயம் அரசியலில் குதிப்பேன். மாநில கட்சியா, தேசிய கட்சியா என்று இன்னும் முடிவு செய்யல" என்றார்.
உடனே நிருபர்கள் சரத்குமாருடன் நெருக்கமாக நடித்திருக்கிறீர்கள். அவரது கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு. "என்னது சரத்குமார் கட்சி நடத்துகிறாரா?" என்று திருப்பி கேட்டு தனது அரசியல் ஞானத்தை நிரூபித்தார். அதைக் கேட்டு நிருபர்களும் ஷாக் ஆனார்கள்.
ஒரு கடைதிறப்புக்காக திருச்சிக்கு சென்றவரிடம், நிருபர்கள் அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்டனர் அதற்கு பதில் அளித்த அவர் "வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்டாயம் அரசியலில் குதிப்பேன். மாநில கட்சியா, தேசிய கட்சியா என்று இன்னும் முடிவு செய்யல" என்றார்.
உடனே நிருபர்கள் சரத்குமாருடன் நெருக்கமாக நடித்திருக்கிறீர்கள். அவரது கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு. "என்னது சரத்குமார் கட்சி நடத்துகிறாரா?" என்று திருப்பி கேட்டு தனது அரசியல் ஞானத்தை நிரூபித்தார். அதைக் கேட்டு நிருபர்களும் ஷாக் ஆனார்கள்.