பனாஜி: கோவாவில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். கட்டட ஒப்பந்ததாரர் விபத்துக்குப் பின்னர் மாயமாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
பனாஜி அருகே உள்ள கனகோனா என்ற இடத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது 3 மாடிகளைக் கொண்டதாகும். இந்தக் கட்டடம் நேற்று மாலையில் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் இடிபாட்டுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். தீயணைபுப் படையினரும், போலீஸாரும் மீட்பு முயற்சிகளில் இறங்கினர். இதில் 11 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்தபோது 50 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
நவி மும்பையைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்தக் கட்டடத்தைக் கட்டி வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை முதல்வர் மனோகர் பாரிக்கர் நேரில் பார்வையிட்டார்.
பனாஜி அருகே உள்ள கனகோனா என்ற இடத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது 3 மாடிகளைக் கொண்டதாகும். இந்தக் கட்டடம் நேற்று மாலையில் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் இடிபாட்டுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். தீயணைபுப் படையினரும், போலீஸாரும் மீட்பு முயற்சிகளில் இறங்கினர். இதில் 11 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்தபோது 50 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
நவி மும்பையைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்தக் கட்டடத்தைக் கட்டி வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை முதல்வர் மனோகர் பாரிக்கர் நேரில் பார்வையிட்டார்.