கோவை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் 5 இடங்களில் வெற்றி பெரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
செயற்குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தலைமைதான் முடிவெடுக்கும். இதனை முடிவு செய்வதற்காக பாஜக அகில இந்திய பொதுக்குழு வரும் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
ம.தி.மு.க., தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை.
பாஜக உடன் அதிமுக கூட்டணி என்பது தேர்தலுக்கு பின்னர் இருக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜக தனித்து நின்றால் நல்லது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் 5 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதனை அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
அகில இந்திய அளவில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும். மோடி நிச்சயம் பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியவேண்டும் என்று கட்சி நிர்பந்தம் செய்தால் போட்டியிருவேன். அது கட்சியின் விருப்பத்தை பொருத்தது.
நரேந்திர மோடியைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்லை எனத் தெரிவித்த சுவாமி, மோடிக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டு அச்சப்பட்டே, இதுபோன்ற கருத்துகளை பிரதமர் கூறி வருகிறார் என்றார்.
செயற்குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தலைமைதான் முடிவெடுக்கும். இதனை முடிவு செய்வதற்காக பாஜக அகில இந்திய பொதுக்குழு வரும் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
ம.தி.மு.க., தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை.
பாஜக உடன் அதிமுக கூட்டணி என்பது தேர்தலுக்கு பின்னர் இருக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, பாஜக தனித்து நின்றால் நல்லது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் 5 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதனை அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்துவேன்.
அகில இந்திய அளவில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும். மோடி நிச்சயம் பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியவேண்டும் என்று கட்சி நிர்பந்தம் செய்தால் போட்டியிருவேன். அது கட்சியின் விருப்பத்தை பொருத்தது.
நரேந்திர மோடியைப் பற்றி பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் ஏற்புடையவை அல்லை எனத் தெரிவித்த சுவாமி, மோடிக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டு அச்சப்பட்டே, இதுபோன்ற கருத்துகளை பிரதமர் கூறி வருகிறார் என்றார்.