மும்பை: படங்களில் தன்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடிகர் ஷாஹித் கபூரை காதலித்து பிரிந்துவிட்டார்.
இவர்கள் இருவரும் பிரிவதும், சேர்வதும் பல முறை நடந்துள்ளது. இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நெருக்கம் என்று பாலிவுட்டில் பெரும் பேச்சாக இருந்தது. பிரியங்காவால் ஷாருக்கானுக்கும், அவரது மனைவி கௌரிக்கும் இடையே பிரச்சனை என்று எல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிலிம்பேர் விருதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியங்கா கலந்து கொண்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு இரவு 7.30 மணிக்கு துவங்கவிருந்தது. ஆனால் பிரியங்கா காலதாமதமாக வந்ததால் இரவு 9 மணிக்கு தான் சந்திப்பு துவங்கியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தான் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.
நான் இதற்கு முன்பு காலதாமதமாக வந்துள்ளேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வருகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் பிரியங்கா.
59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்கள். முதல் முறையாக விருது விழாவை தொகுத்து வழங்குவதால் பிரியங்கா சற்று பதட்டமாக உள்ளார்.
ஷாருக்கானும் பிரியங்காவும் சேர்ந்து டான் மற்றும் டான் 2 ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரீல் வாழ்க்கையில் காதல், காமெடியில் கலக்கும் ஷாருக்கும், பிரியங்காவும் ஜோடியாக விழாவை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பிரியங்கா கூறுகையில், அது என்ன ஷாருக், என்னால் யாரையும் படத்தில் ரொமான்ஸ் செய்ய முடியும். அது என் தொழில் என்றார்.
இவர்கள் இருவரும் பிரிவதும், சேர்வதும் பல முறை நடந்துள்ளது. இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே நெருக்கம் என்று பாலிவுட்டில் பெரும் பேச்சாக இருந்தது. பிரியங்காவால் ஷாருக்கானுக்கும், அவரது மனைவி கௌரிக்கும் இடையே பிரச்சனை என்று எல்லாம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பிலிம்பேர் விருதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியங்கா கலந்து கொண்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு இரவு 7.30 மணிக்கு துவங்கவிருந்தது. ஆனால் பிரியங்கா காலதாமதமாக வந்ததால் இரவு 9 மணிக்கு தான் சந்திப்பு துவங்கியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தான் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.
நான் இதற்கு முன்பு காலதாமதமாக வந்துள்ளேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வருகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் பிரியங்கா.
59வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவை பிரியங்கா சோப்ராவும், நடிகர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்கள். முதல் முறையாக விருது விழாவை தொகுத்து வழங்குவதால் பிரியங்கா சற்று பதட்டமாக உள்ளார்.
ஷாருக்கானும் பிரியங்காவும் சேர்ந்து டான் மற்றும் டான் 2 ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரீல் வாழ்க்கையில் காதல், காமெடியில் கலக்கும் ஷாருக்கும், பிரியங்காவும் ஜோடியாக விழாவை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பிரியங்கா கூறுகையில், அது என்ன ஷாருக், என்னால் யாரையும் படத்தில் ரொமான்ஸ் செய்ய முடியும். அது என் தொழில் என்றார்.