சென்னை: தன்னைக் கெடுத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை மனைவி என்று கூறும் டிவி நடிகருடன் திருமணம் செய்து வைக்குமாறு போலீசில் மனுக்களாகக் கொடுத்து வருகிறார் ஒரு துணை நடிகை.
சென்னை மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்தவர் ரேணுகா. 26 வயது புதுமுக நடிகையான அவர், ஏற்கெனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், "நான் பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளேன். திரைப்படம் ஒன்றில் நடிக்கிறேன். உதவி இயக்குனராகவும் உள்ளேன். எனக்கும், டி.வி. நடிகர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. அந்த நடிகர் என்ஜினீயரிங் பட்டதாரி. ஆரம்பத்தில் இருவரும் பஸ்சில் வருவோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
கற்பை தொலைத்து விட்டேன்
அவர் என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் என்னோடு, படுக்கையை பகிர்ந்து கொண்டார். பலமுறை அவரிடம் நான் கற்பை தொலைத்து இருக்கிறேன். அவர்தான் எனது கணவர் என்று மனதளவில் முடிவு செய்துதான், அவரிடம் நெருங்கி பழகினேன்.
தற்போது, அவர் என்னை விட்டு, விலகி சென்று விட்டார். என்னோடு பேச மறுக்கிறார். பேஸ்புக்கில் வேறு ஒரு பெண்ணோடு தனது படத்தை வெளியிட்டு, அந்த பெண் தனது மனைவி என்றும் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், அவரை சென்று பார்த்தேன். அவர் என்னை யார்? என்று கேட்கிறார். அவரது கேள்வியை கேட்டு, எனது இதயம் நொறுங்கிப்போனது.
அவர் எனக்கு வேண்டும். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனுக்கள் மேல் மனுக்களாக போலீசாரிடம் தந்தும், நடவடிக்கை எடுக்கவில்லையே என கண்ணீருடன் கமிஷனர் அலுவலக வாசலில் புலம்பினார்.
சென்னை மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்தவர் ரேணுகா. 26 வயது புதுமுக நடிகையான அவர், ஏற்கெனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், "நான் பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளேன். திரைப்படம் ஒன்றில் நடிக்கிறேன். உதவி இயக்குனராகவும் உள்ளேன். எனக்கும், டி.வி. நடிகர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. அந்த நடிகர் என்ஜினீயரிங் பட்டதாரி. ஆரம்பத்தில் இருவரும் பஸ்சில் வருவோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
கற்பை தொலைத்து விட்டேன்
அவர் என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் என்னோடு, படுக்கையை பகிர்ந்து கொண்டார். பலமுறை அவரிடம் நான் கற்பை தொலைத்து இருக்கிறேன். அவர்தான் எனது கணவர் என்று மனதளவில் முடிவு செய்துதான், அவரிடம் நெருங்கி பழகினேன்.
தற்போது, அவர் என்னை விட்டு, விலகி சென்று விட்டார். என்னோடு பேச மறுக்கிறார். பேஸ்புக்கில் வேறு ஒரு பெண்ணோடு தனது படத்தை வெளியிட்டு, அந்த பெண் தனது மனைவி என்றும் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், அவரை சென்று பார்த்தேன். அவர் என்னை யார்? என்று கேட்கிறார். அவரது கேள்வியை கேட்டு, எனது இதயம் நொறுங்கிப்போனது.
அவர் எனக்கு வேண்டும். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனுக்கள் மேல் மனுக்களாக போலீசாரிடம் தந்தும், நடவடிக்கை எடுக்கவில்லையே என கண்ணீருடன் கமிஷனர் அலுவலக வாசலில் புலம்பினார்.