புதுடெல்லி: இந்திய துணைத் தூதர் தேவயானியை நாட்டைவிட்டு வெளியேற்றியதற்கு பதில் நடவடிக்கையாக, அவரைப்போன்றே துணைத் தூதர் அந்தஸ்தில் உள்ள தனது தூதரக அதிகாரி ஒருவரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய துணை தூதரக அதிகாரியாக இருந்த தேவ்யானி கோப்ரகடே, பணிப்பெண்ணை வரவழைத்ததில் விசா முறைகேடு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டதோடு, ஆடை களையப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த விவகாரத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தேவயானி, தன் மீது குற்றசாட்டுகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நியூயார்க் நீதிமன்றம் ஏற்க மறுத்து, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதற்கிடையே, தேவயானியை ஐ.நா. சிறப்பு தூதராக நியமித்து இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. இது உடனடியாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரப்பட்டது. தேவயானி கைது செய்யப்பட்டபோதே அவருக்கு விலக்கு பெறுவதற்கான உரிமை இல்லை என்று கூறி, வழக்கை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்தது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில்,"தேவயானிக்கு ஐ.நா. சிறப்பு தூதரக பொறுப்பு சமீபத்தில்தான் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமை இப்போதுதான் கிடைத்துள்ளது. எனவே, அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளும் அப்படியே இருக்கும். விசா பெறுவதற்கு பொய் தகவல் அளித்தது, முறைகேடாக விசா பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும். அவர் இந்தியாவுக்கு திரும்பினாலும் திரும்பி வரும் போது அவர் விசாரணையை சந்திக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தேவயானிக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும் என்று இந்திய அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை ஏற்க இந்தியா மறுத்தது. இதையடுத்து, தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தியா புறப்பட்டார்.
இந்நிலையில் தேவயானியை வெளியேற்றியதற்கு பதில் நடவடிக்கையாக, அவரைப்போன்றே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதர் அந்தஸ்தில் உள்ள தனது அதிகாரி ஒருவரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்திய துணை தூதரக அதிகாரியாக இருந்த தேவ்யானி கோப்ரகடே, பணிப்பெண்ணை வரவழைத்ததில் விசா முறைகேடு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டார். அவர் கைவிலங்கிடப்பட்டதோடு, ஆடை களையப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த விவகாரத்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தேவயானி, தன் மீது குற்றசாட்டுகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நியூயார்க் நீதிமன்றம் ஏற்க மறுத்து, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதற்கிடையே, தேவயானியை ஐ.நா. சிறப்பு தூதராக நியமித்து இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. இது உடனடியாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரப்பட்டது. தேவயானி கைது செய்யப்பட்டபோதே அவருக்கு விலக்கு பெறுவதற்கான உரிமை இல்லை என்று கூறி, வழக்கை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்தது.
இந்த நிலையில், அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு கடிதத்தில்,"தேவயானிக்கு ஐ.நா. சிறப்பு தூதரக பொறுப்பு சமீபத்தில்தான் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமை இப்போதுதான் கிடைத்துள்ளது. எனவே, அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளும் அப்படியே இருக்கும். விசா பெறுவதற்கு பொய் தகவல் அளித்தது, முறைகேடாக விசா பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும். அவர் இந்தியாவுக்கு திரும்பினாலும் திரும்பி வரும் போது அவர் விசாரணையை சந்திக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, தேவயானிக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும் என்று இந்திய அரசிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை ஏற்க இந்தியா மறுத்தது. இதையடுத்து, தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தியா புறப்பட்டார்.
இந்நிலையில் தேவயானியை வெளியேற்றியதற்கு பதில் நடவடிக்கையாக, அவரைப்போன்றே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதர் அந்தஸ்தில் உள்ள தனது அதிகாரி ஒருவரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.