RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இந்த நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு!- ஸ்ருதிஹாஸன்

From: 'விஸ்தாரம்'

POST 12/1/2014, 12:21 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
மும்பை: இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ருதிஹாஸன். நடிகை ஸ்ருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பாலிவுட்டையே அதிர வைத்தது.

கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து கழுத்தைப் பிடித்து இறுக்கி, பின் தப்பிவிட்டார். ச்சே.. இந்த நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாம போச்சு!- ஸ்ருதிஹாஸன் போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இதையடுத்து ஸ்ருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையில் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார். பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் நியமித்து உள்ளார். அவருடன் யாரும் நேரடியாக யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என சரிகா தடை விதித்துள்ளாராம்.

இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் கூறுகையில், "எனக்கு நடந்த மாதிரி இந்த நாட்டில் நிறைய நடந்து கொண்டுதான் உள்ளது. தனியாக வாழும் பெண்கள் இது போன்ற கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு நான் பயந்துவிட்டேன்.

இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வருகிறேன். நிறைய பேர் தனியாக இருக்காதே என்று வற்புறுத்துகிறார்கள். ஆனால் எனக்கு தனியாக இருக்கவே விருப்பம். விரைவில் வேறு வீட்டில் குடியேறுவேன். இனிமேல் எச்சரிக்கையாக இருப்பேன்," என்றார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT