திருநெல்வேலி எனும் பெயர் தோன்ற காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் விழா, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி என்னும் பெயர் வருவதற்கு முன்பு, தீவிர சிவ பக்தரான வேதபட்டர் (வேதசர்மா) என்பவர் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக, பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார்.
ஒரு நாள் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரவருணி ஆற்றிற்கு அவர் சென்றிருந்தபோது, மழை பெய்தது. இதனால், இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போட்டிருந்த நெல் நனைந்து விடுமே என பதறியபடி கவலையுடன் வேதபட்டர் கோயிலுக்கு ஓடி வந்தாராம். ஆனால், அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் ஒளியால் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது என்பது புராண வரலாறு.
இந்த நிகழ்வுக்கு பிறகுதான் நெல்லையப்பர் கோயில் அமைந்திருந்த பகுதியை சாலிவாடீஸ்வரம் என்று அழைக்கத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. சாலி என்றால் நெல் என்பதும் வாடீஸ்வரம் என்றால் வேலியிட்டு பாதுகாத்தல் என்பது பொருளாகும். அதுவே தமிழில் திருநெல்வேலி என்றானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோயிலின் தைப்பூச திருநாளின் 4-ம் நாள் நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவையொட்டி, சுவாமி சன்னதி கொடிமர மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு காசுக்கடை குமாஸ்தாக்களின் பால்குட வீதிவலம், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு திருமுழுக்கு தீப ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமி-அம்பாள் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நெல்மணிகளைத் தூவி சுவாமியை வழிபட்டனர்.
மாலையில் மூலமகாலிங்கம் வேண்டுவளர்த்த மகாலிங்கம் சிறப்பு பஞ்சமுக அர்ச்சனை, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
திருநெல்வேலி என்னும் பெயர் வருவதற்கு முன்பு, தீவிர சிவ பக்தரான வேதபட்டர் (வேதசர்மா) என்பவர் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக, பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார்.
ஒரு நாள் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரவருணி ஆற்றிற்கு அவர் சென்றிருந்தபோது, மழை பெய்தது. இதனால், இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போட்டிருந்த நெல் நனைந்து விடுமே என பதறியபடி கவலையுடன் வேதபட்டர் கோயிலுக்கு ஓடி வந்தாராம். ஆனால், அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் ஒளியால் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது என்பது புராண வரலாறு.
இந்த நிகழ்வுக்கு பிறகுதான் நெல்லையப்பர் கோயில் அமைந்திருந்த பகுதியை சாலிவாடீஸ்வரம் என்று அழைக்கத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. சாலி என்றால் நெல் என்பதும் வாடீஸ்வரம் என்றால் வேலியிட்டு பாதுகாத்தல் என்பது பொருளாகும். அதுவே தமிழில் திருநெல்வேலி என்றானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோயிலின் தைப்பூச திருநாளின் 4-ம் நாள் நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி சனிக்கிழமை நடைபெற்ற இவ்விழாவையொட்டி, சுவாமி சன்னதி கொடிமர மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு காசுக்கடை குமாஸ்தாக்களின் பால்குட வீதிவலம், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு திருமுழுக்கு தீப ஆராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமி-அம்பாள் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நெல்மணிகளைத் தூவி சுவாமியை வழிபட்டனர்.
மாலையில் மூலமகாலிங்கம் வேண்டுவளர்த்த மகாலிங்கம் சிறப்பு பஞ்சமுக அர்ச்சனை, சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.