RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

இந்த நாளில் அன்று: 11.1.1941 : ஜின்னாவின் விடாப்பிடியான குதர்க்கம்

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 4:24 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
இந்த நாளில் அன்று: 11.1.1941 : ஜின்னாவின் விடாப்பிடியான குதர்க்கம்;

போடு துண்டு: பிறகு நண்பர்களாக வாழலாம்

பம்பாய், ஜன.10-

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் அபிப்பிராய பேதங்களை தீர்த்துக் கொண்டு அவரவர்களுடைய தாயகங்களில் நிலையாக இருக்க ஆரம்பித்துவிட்டால் இந்நாடு, இந்தியாவிடம் வாலாட்டாதே என்ற சித்தாந்தத்தை நிலை நாட்ட முடியும் என்று ஸ்ரீ.ஜின்னா இன்று மாலை கவாஸ்ஜி ஜஹாங்கீர் ஹாலில் முஸ்லிம் கல்வி சேவை சங்க வருஷாந்திரக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

நாட்டை துண்டாக்குவதே ஒரே வழி

இந்த நாளில் அன்று: 11.1.1941 : ஜின்னாவின் விடாப்பிடியான குதர்க்கம் Old_11_1_41

மேலும் அவர் பேசியதாவது: -

ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இந்நாட்டை பிரித்துக் கொள்வதே சுதந்திரம் அடையவும் அந்த சுதந்திரத்தை ஸ்திரப்படுத்தவும், நல்ல குறுக்கு வழியாகும். அதற்குப் பின் நாம் பரஸ்பர நேசத்திலுள்ள அக்கம்பத்துக்காரர்களாயிருக்கலாம்.

காந்திஜி உயிருடனிருந்து நானும் ஜீவனுடனிருந்தால், நாங்கள் இருவரும் இந்தியாவில் கை வைக்காதே என உலகுக்குச் சொல்லுவோம்.

ஸ்ரீ.ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்துகையில் நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்னையை புதிய திருஷ்டியில் கவனித்து பழைய நினைப்புகளை விட்டொழிக்குமாறு ஹிந்துக்களை கேட்டுக் கொண்டார். பிரச்னையை தீர்க்க அந்த ஒரே வழிதான் இருக்கிறது. வெகு வேகமாக நிலைமைகள் மாறிவரும் இவ்வுலகில், பழைய உடன்படிக்கைகளை கிழித்தெறிந்து புதிய ஒப்பந்தங்களை செய்ய வேண்டியது ரொம்ப அவசியமாகும்.

மகாசபை மீது பாய்ச்சல்

ஸ்ரீ.ஜின்னா இந்நாட்டிலுள்ள பல்வேறு கக்ஷிகளை பிரஸ்தாபித்துப் பேசினார். பாக்கிஸ்தான் திட்டத்தை அடியோடு நிராகரிப்பதாக பிரகடனஞ் செய்யுமாறு பிரிட்டிஷாரைக் கேட்பதில் பெருங்கூச்சல் போடுவது ஹிந்து மகாசபைதான். அதைப் போல பிரகடனத்தை மகாசபை எதற்காக பிரிட்டிஷாரைக் கேட்கவேண்டுமென எனக்குத் தெரியவில்லை.

ஜனநாயகம் வேண்டுமென காங்கிரஸ் கேட்பதும், ஹிந்து ஆட்சி வேண்டுமென்ற கோரிக்கையேயாகும். ஒரே வகுப்பிலோ அல்லது ஒரே சமூகத்திலோ ஜனநாயகம் வேண்டுமென்ற பேச்சுக்கும், மெஜாரிட்டி ஆட்சி வேண்டுமென்ற பேச்சுக்கும் அர்த்தமுண்டு.

ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் ரக ஜனநாயகம் வேண்டுமென்றால், ஒரு வகுப்பு இன்னொரு வகுப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றே பொருள்படும். இந்திய அரசியலமைப்புக்கு அதுதான் ஸ்திரமான அஸ்திவாரமா?

(11.1.1941 தினமணியில் வெளியான செய்தி...)



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT