பட அறிமுக விழாவில் 2 தோல்வி படம் தந்ததாக கண் கலங்கிய இயக்குனர் ஜீவனுக்கு ஆறுதல் கூறினார் சமுத்திரக்கனி.
பாடலாசிரியர் விஜய் நடித்த ஞாபகங்கள், பிரகாஷ்ராஜ் தயாரித்த மயிலு ஆகிய படங்களை இயக்கியவர் ஜீவன். அடுத்து மொசக்குட்டி என்ற படத்தை இயக்குகிறார். இதில் அவர் பேசும்போது, ஏற்கனவே 2 தோல்வி படங்களை நான் தந்தவன்.
அப்படி இருந்தும் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார் மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ். நல்ல படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இன்னும் பிரபலமாக பேசப்படும் வாய்ப்பு கிட்டாதவர் ரமேஷ் வினாயகம்.
அவர் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். மொசக்குட்டி என்ற இக்கதையில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும், நான் பார்த்த நிஜங்களையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் நடித்த புதுமுகம் வீரா, கதாநாயகி மஹிமா இருவரும் கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்கள். டூப் போட்டுத்தான் ரிஸ்க்கான காட்சிகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டன்ட் மாஸ்டர் கூறியபோதும் தாங்களே நடிப்பதாக கூறி 2000 அடிக்கும் ஆழமான பள்ளத்தின் மீது தொங்கியபடி நடித்தனர். எல்லோரது கடுமையான உழைப்புடன் இப்படம் உருவாகி இருக்கிறது என்றார்.
இதையடுத்து பேசிய சமுத்திரக்கனி, ஜீவன் பற்றி எனக்கு நன்றாக தெரியும். 2 தோல்வி படங்களை கொடுத்தேன் என்று அவர் பேசினார். படம் வசூல் இல்லாததால் அப்படி சொன்னார். ஆனால் அந்த 2 படங்களுமே அருமையான கதை அம்சத்துடன் உருவானது. தோல்வி என்பது வெற்றிக்கு படிக்கல். இப்படம் ஜீவனுக்கு வெற்றிபடமாக அமையும் என்றார்.
பாடலாசிரியர் விஜய் நடித்த ஞாபகங்கள், பிரகாஷ்ராஜ் தயாரித்த மயிலு ஆகிய படங்களை இயக்கியவர் ஜீவன். அடுத்து மொசக்குட்டி என்ற படத்தை இயக்குகிறார். இதில் அவர் பேசும்போது, ஏற்கனவே 2 தோல்வி படங்களை நான் தந்தவன்.
அப்படி இருந்தும் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார் மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ். நல்ல படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் இன்னும் பிரபலமாக பேசப்படும் வாய்ப்பு கிட்டாதவர் ரமேஷ் வினாயகம்.
அவர் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். மொசக்குட்டி என்ற இக்கதையில் வாழ்க்கையின் யதார்த்தத்தையும், நான் பார்த்த நிஜங்களையும் இதில் பதிவு செய்திருக்கிறேன்.
இதில் நடித்த புதுமுகம் வீரா, கதாநாயகி மஹிமா இருவரும் கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்கள். டூப் போட்டுத்தான் ரிஸ்க்கான காட்சிகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டன்ட் மாஸ்டர் கூறியபோதும் தாங்களே நடிப்பதாக கூறி 2000 அடிக்கும் ஆழமான பள்ளத்தின் மீது தொங்கியபடி நடித்தனர். எல்லோரது கடுமையான உழைப்புடன் இப்படம் உருவாகி இருக்கிறது என்றார்.
இதையடுத்து பேசிய சமுத்திரக்கனி, ஜீவன் பற்றி எனக்கு நன்றாக தெரியும். 2 தோல்வி படங்களை கொடுத்தேன் என்று அவர் பேசினார். படம் வசூல் இல்லாததால் அப்படி சொன்னார். ஆனால் அந்த 2 படங்களுமே அருமையான கதை அம்சத்துடன் உருவானது. தோல்வி என்பது வெற்றிக்கு படிக்கல். இப்படம் ஜீவனுக்கு வெற்றிபடமாக அமையும் என்றார்.