சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மீனவர் விவகாரத்தில் இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே மோதலை ஏற்படுத்த இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்கின்றன.
இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை முன்மொழிய மத்திய அரசை டெசோ அமைப்பு வலியுறுத்த வேண்டும். திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று முன்தினம் திருமாவளவன் சந்தித்த நிலையில் இன்று கருணாநிதியை சந்தித்து பேசினார். இதனால் இன்றைய சந்திப்பில் கூட்டணி குறித்து விவாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மீனவர் விவகாரத்தில் இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே மோதலை ஏற்படுத்த இருநாட்டு அரசுகளும் முயற்சி செய்கின்றன.
இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை முன்மொழிய மத்திய அரசை டெசோ அமைப்பு வலியுறுத்த வேண்டும். திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று முன்தினம் திருமாவளவன் சந்தித்த நிலையில் இன்று கருணாநிதியை சந்தித்து பேசினார். இதனால் இன்றைய சந்திப்பில் கூட்டணி குறித்து விவாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது.