"மகள் ரோலுக்கு, ஸ்ரீதேவியை கேட்கலாம்' என்றார் பாலு. படத்தில் உள்ள மற்றொரு முக்கிய பாத்திரத்தை, நான் செய்ய வேண்டும் என்று, சிவாஜியே கூறினார்.
"சார்... இப்போது நீங்க இருக்கிற மாதிரியே இருந்தால் போதும். "மேக்-அப்' இல்லாமல், படத்தை எடுக்க விரும்புகிறேன்... ' என்றார் பாலு. சிறிதும் யோசிக்காமல், "அப்படியே செய்யுங்க...' என்றார் சிவாஜி. பாலு சொன்ன கதை, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.
இந்தப்படம், சிவாஜி - பாலு மகேந்திரா காம்பினேஷனில் வெளி வந்திருந்தால், சரித்திரம் படைத்திருக்கும். யார் காரணம் என்று தெரிய வில்லை. அந்த, "ப்ராஜெக்ட்' நின்று போனது.
சிவாஜி, சினிமாவில் ரொம்ப பிசியாக இருந்த போதும், அவர் வீட்டி லிருக்கும் போது, போன் மணி அடித்தால், அவரே தான் போனை எடுப்பார். அவர், "ஹலோ' என்று சொன்னதுமே, நமக்கு, "யார் பேசுவது' என்று தெரிந்து விடும். தமிழர் கள், கேட்டு கேட்டு, நன்கு பழக்கமான சிம்மக் குரலாயிற்றே. நான் போன் செய்து, அவரே எடுத்து, பதில் சொல்லிய அனுபவம், எனக்கு, நிறைய தடவை நடந் திருக்கிறது.
சென்னையில், வீடியோ கேசட் பிளேயர் வந்த சமயம். சிவாஜியின் பழைய படங்களை, வீடியோ கேசட் மூலம், பார்த்து ரசிப்பதோடு, வீடியோ கேசட்களை சேகரிப்பதிலும், எனக்கு ஈடுபாடு உண்டு.
ஒரு மாலை பொழுதில், சிவாஜியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.
"நான் தான் பேசறேன்...'
"சொல்லுங்க சார்...'
"என்ன... நீ, நிறைய வீடியோ டேப்ஸ் எல்லாம் வச்சிருக்கியாமே...'
"ஆமாம்... எங்க சிவாஜிங்கிறவர் நடித்த, படங்களுடைய, வீடியோ டேப்ஸ் வைச்சிருக்கேன்...'
"அப்படிங்களா... அந்த, உங்க சிவாஜிங்கிறவர் நடித்த, புதிய பறவை வீடியோ டேப் கொடுடா. பார்க்கணும் போல இருக்கு... 'என்றார். உடனே, ஒரு மணி நேரத்திற்குள், அவர் கேட்ட, புதிய பறவை, வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன்.
நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம், பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான, சாந்தி தியேட்டரில், அப்படம் ஒடிக் கொண்டிருந்தது. என் பாட்டி அலமேலு அம்மாள், "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம். எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி, அழைத்துச் சென்றார். என் பாட்டி, ரொம்ப ஆச்சாரமானவர். சினிமா அதிகம் பார்ப்பதில்லை. அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.
படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று, அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.
படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.
இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.
நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன். படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே, துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி. அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை, வெளிப்படுத்தியிப்பார்.
ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும் காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர் ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும், ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து, உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங் செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன். என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு சென்றான்.
மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம். "என்கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது. தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர், என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை, படத்தை பார்த்த பின், உணர முடிந்தது. படம் முழுவதும் வருகிற கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை, ஏற்று நடித்திருக்கிறார். மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே, அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.
* ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் திருப்பூர் குமரன், பகத்சிங்; ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி, ரத்த திலகம் படத்தில் ராணுவ வீரன், கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார் (பாடல் காட்சியில் மட்டும்) சினிமா பைத்தியம் படத்தில் வாஞ்சி நாதன், தச்சோளி அம்பு (மலையாளப்படம்) போன்று பல படங்களில், தேச பக்தியை வெளிப்படுத்தும் பல ஓரங்க நாடகங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி. அப்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு, நம் தேச பக்தி வீரர்களை அதிகமாக அறிமுகப்படுத்தி வைத்தது, சிவாஜியாகத் தான் இருக்க முடியும்.