துறையூர்: "இயல்பாய் இருங்கள், முகமூடி தேவையில்லை" என, புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் நடந்த விழாவில் மாணவ, மாணவியருக்கு தமிழருவி மணியன் அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு (தன்னாட்சி) கல்லூரியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில் நடந்த கல்லூரி நிறுவனர் மூக்கப்பிள்ளையின் 129வது பிறந்த நாள், 38வது நினைவுநாள் விழாவிற்கு கல்லூரி தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன், உறுப்பினர் சிவனேஸ்வரி, முதல்வர் ஜெயபிரகாசம், ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சுப்ரமணியம், முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பேரவை தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். வக்கீல் கணேசன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.
விழாவில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், "காந்திஜி காட்டிய வழியில் மூக்கப்பிள்ளை" என்ற தலைப்பில் பேசியதாவது:
மூக்கப்பிள்ளை வறுமையில் பிறந்தாலும் கடின உழைப்பால் சேர்த்த செல்வத்தை வைத்து குக்கிராமமான புத்தனாம்பட்டியில் பள்ளி, கல்லூரி நிறுவி இப்பகுதி மக்கள் கல்வி கற்க பேருதவி புரிந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வி செல்வம் கிடைக்க செய்து 1950ல் தமிழக அரசின் தங்க பதக்கம் விருது பெற்றுள்ளார். அவருக்கு எப்போதம் நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் வீட்டில் பெற்றோரிடம் கல்லூரியில், அலுவலகத்தில், நண்பர்களிடம் என ஒவ்வொருவரிடமும் பழகும்போது அதற்கேற்ப முகமூடி அணிந்து பழகுகிறோம். நாம் உண்மையாக இல்லாமல் இருப்பதால் தான் இப்படி நேருகிறது. ஜென்தத்துவம் கூறுவது போல் இயல்பாய் இருங்கள். முகமூடி தேவையில்லை.
சுதந்திர போராட்டத்தின் போது அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெறுங்கள். சிறையில் உள்ள தலைவர்களை விடுதலை செய்கிறோம் என பிரிட்டிஷ் அரசு கூறியபோது, கள்ளுக்கடை போராட்டத்தை கைவிடமாட்டேன் என கூறியவர் காந்தியடிகள்.
தமிழகத்தில் 1937ல் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே ராஜாஜி மதுவிலக்கை அமுல்படுத்தினார். இப்போது மக்களுக்கு இலவச பொருட்களை தரும் தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனை மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக வசூலிக்கிறது.
தமிழகத்தில் வெகுவிரைவில் உடல் உறுப்பு தொழிலாளர்களே இல்லாத நிலை ஏற்படும். இந்நிலையை போக்க அனைவரும் குறிப்பாக பெண்கள் குடித்துவிட்டு வரும் ஆண்களுக்கு எதிராக போராட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
விழாவை தமிழ்துறை உதவி பேராசிரியர் திவேல் தொகுத்து வழங்கினார். விழாவில் முன்னாள் மாணவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். பேரவை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு (தன்னாட்சி) கல்லூரியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில் நடந்த கல்லூரி நிறுவனர் மூக்கப்பிள்ளையின் 129வது பிறந்த நாள், 38வது நினைவுநாள் விழாவிற்கு கல்லூரி தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.
கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன், உறுப்பினர் சிவனேஸ்வரி, முதல்வர் ஜெயபிரகாசம், ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சுப்ரமணியம், முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தனர். பேரவை தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். வக்கீல் கணேசன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.
விழாவில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், "காந்திஜி காட்டிய வழியில் மூக்கப்பிள்ளை" என்ற தலைப்பில் பேசியதாவது:
மூக்கப்பிள்ளை வறுமையில் பிறந்தாலும் கடின உழைப்பால் சேர்த்த செல்வத்தை வைத்து குக்கிராமமான புத்தனாம்பட்டியில் பள்ளி, கல்லூரி நிறுவி இப்பகுதி மக்கள் கல்வி கற்க பேருதவி புரிந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வி செல்வம் கிடைக்க செய்து 1950ல் தமிழக அரசின் தங்க பதக்கம் விருது பெற்றுள்ளார். அவருக்கு எப்போதம் நாம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் வீட்டில் பெற்றோரிடம் கல்லூரியில், அலுவலகத்தில், நண்பர்களிடம் என ஒவ்வொருவரிடமும் பழகும்போது அதற்கேற்ப முகமூடி அணிந்து பழகுகிறோம். நாம் உண்மையாக இல்லாமல் இருப்பதால் தான் இப்படி நேருகிறது. ஜென்தத்துவம் கூறுவது போல் இயல்பாய் இருங்கள். முகமூடி தேவையில்லை.
சுதந்திர போராட்டத்தின் போது அனைத்து போராட்டங்களையும் வாபஸ் பெறுங்கள். சிறையில் உள்ள தலைவர்களை விடுதலை செய்கிறோம் என பிரிட்டிஷ் அரசு கூறியபோது, கள்ளுக்கடை போராட்டத்தை கைவிடமாட்டேன் என கூறியவர் காந்தியடிகள்.
தமிழகத்தில் 1937ல் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே ராஜாஜி மதுவிலக்கை அமுல்படுத்தினார். இப்போது மக்களுக்கு இலவச பொருட்களை தரும் தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனை மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரியாக வசூலிக்கிறது.
தமிழகத்தில் வெகுவிரைவில் உடல் உறுப்பு தொழிலாளர்களே இல்லாத நிலை ஏற்படும். இந்நிலையை போக்க அனைவரும் குறிப்பாக பெண்கள் குடித்துவிட்டு வரும் ஆண்களுக்கு எதிராக போராட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.
விழாவை தமிழ்துறை உதவி பேராசிரியர் திவேல் தொகுத்து வழங்கினார். விழாவில் முன்னாள் மாணவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். பேரவை செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.