வசந்த் டி.வி. வாய்மையே வெல்லும் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனிநபர்களுக்கு இடையேயான குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி ஒன்று எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும்.
அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பதப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பால் எங்களை மிரட்டியது. இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்தோம். இருதரப்பினரும் காவல் நிலையத்திலேயே தகராறு செய்தார்கள்.
இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி ஒன்று எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும்.
அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பதப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பால் எங்களை மிரட்டியது. இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்தோம். இருதரப்பினரும் காவல் நிலையத்திலேயே தகராறு செய்தார்கள்.
இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.