RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

டெல்லி ரயில் நிலையம் அருகே 51 வயது டென்மார்க் பெண்ணை சீரழித்த கும்பல்

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 5:28 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: டெல்லி ரயில் நிலையம் அருகே தன்னை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக 51 வயது டென்மார்க் பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அந்த பெண் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நான் கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ளேன். முதலில் ஆக்ராவுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்தேன். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளேன். செவ்வாய்க்கிழமை மாலை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும்போது வழி தெரியாமல் போனது.

ஹோட்டலுக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தபோது டெல்லி ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் என்னிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை அந்த கும்பல் திருடிச் சென்றது என்று அதில் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் இந்த சம்பவத்தை அடுத்து ஒரு வழியாக ஹோட்டலுக்கு வந்து தன் நாட்டு தூரகத்திலும், போலீசிலும் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT