புதுடில்லி: கடந்த 1984-ம் ஆண்டு பொற்கோவிலி்ல் நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் புளுஸ்டார் சம்பவம் குறித்து தற்போது வெளியிட்டுள்ள ஆவணத்தால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆபரேஷன் புளு ஸ்டார்:
கடந்த 1981-ம் ஆண்டு முதல் 92-ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தை சீக்கியர்களுக்கான தனிநாடாக கோரி பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப் போராட்டத்தின் விளைவால் சுமார் 25 ஆயிரம் மக்கள் பலியாகினர். இந்நிலையில் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது.
பிரிவினைவாதிகளை பொற்கோவிலில் இருந்து வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா , இந்திய ராணுவத்தை 'ஆபரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பெற்கோவிலுக்குள் நுழைய விட்டு சோதனையை நடத்த உத்தரவிட்டார்.ராணுவத்தினர் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயிலின் புனிதம் போய்விட்டதாக சீக்கியர்கள் போரட்டங்களை நடத்தினர். இப்பிரச்னை நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து உதவி?:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது இங்கிலாந்து நாட்டின் தொழிற்கட்சி எம்.பி., ஒருவர் வெளியிட்டுள்ள ஆவணத்தின் மூலம் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி., டாம் வாட்சன் வெளி்யிட்டுள்ள தகவலில் ஆபரேஷன் புளு ஸ்டார் நிகழ்ச்சியில் அப்போதைய முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் அரசு , இந்தியாவிற்கு ரகசியமாக உதவியது என தெரிவித்திருந்தார்.
பா.ஜ.,கோரிக்கை:
இங்கிலாந்தில் வெளியிடப் பட்டுள்ளஆவணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் அருண்ஜெட்லி இங்கிலாந்து நாட்டுடன் இந்திராவுக்கு இங்கிலாந்து அரசு உதவி செய்த ரகசியம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அகாலிதள செய்திதொடர்பாளர் தல்ஜித்சிங் சீமா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபரேஷன் புளு ஸ்டார் பிரச்னையில் உள்ள உண்மையான சதி அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கர்னெய்ல்சி்ங் பீர் முகம்மது கூறுகையில் வரும் 17-ம் தேதி புதுடில்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் முன் ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
ஆளும் அகாலிதள கட்சியை சேர்ந்த எம்.பி., நரேஷ்குஜ்ரால் கூறுகையில் இது சீக்கிய சமுகத்திற்கு குழப்பாக உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கூறியுள்ளார்.
மாஜி தளபதி மறுப்பு:
இந்த விவகாரம் குறித்து ஆபரேசன் புளு ஸ்டார் நடவடிக்கையினை நடத்திய முன்னாள் ராணுவ தளபதி கே.எஸ்.பிரார் கூறுகையில், ஆபரேசன் புளு ஸ்டார் நடத்தியதில் இங்கிலாந்தின் பங்கு இல்லை. இது முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையே என்றார்.
மத்தியஅரசு விளக்கம்:
இங்கிலாந்தில் வெளி்யிடப்பட்ட ஆவணம் குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத்அக்பருதீன் கூறுகையில் அறிக்கைகள் மற்றும் உண்மையான தகவல்கள் இல்லாமல் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் இது சம்பந்தமாக இங்கிலாந்து அரசிடம் தகவல்கள் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஆபரேஷன் புளு ஸ்டார்:
கடந்த 1981-ம் ஆண்டு முதல் 92-ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநிலத்தை சீக்கியர்களுக்கான தனிநாடாக கோரி பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப் போராட்டத்தின் விளைவால் சுமார் 25 ஆயிரம் மக்கள் பலியாகினர். இந்நிலையில் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டது.
பிரிவினைவாதிகளை பொற்கோவிலில் இருந்து வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா , இந்திய ராணுவத்தை 'ஆபரேஷன் புளு ஸ்டார்' என்ற பெயரில் பெற்கோவிலுக்குள் நுழைய விட்டு சோதனையை நடத்த உத்தரவிட்டார்.ராணுவத்தினர் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயிலின் புனிதம் போய்விட்டதாக சீக்கியர்கள் போரட்டங்களை நடத்தினர். இப்பிரச்னை நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து உதவி?:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது இங்கிலாந்து நாட்டின் தொழிற்கட்சி எம்.பி., ஒருவர் வெளியிட்டுள்ள ஆவணத்தின் மூலம் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி., டாம் வாட்சன் வெளி்யிட்டுள்ள தகவலில் ஆபரேஷன் புளு ஸ்டார் நிகழ்ச்சியில் அப்போதைய முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் அரசு , இந்தியாவிற்கு ரகசியமாக உதவியது என தெரிவித்திருந்தார்.
பா.ஜ.,கோரிக்கை:
இங்கிலாந்தில் வெளியிடப் பட்டுள்ளஆவணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் அருண்ஜெட்லி இங்கிலாந்து நாட்டுடன் இந்திராவுக்கு இங்கிலாந்து அரசு உதவி செய்த ரகசியம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அகாலிதள செய்திதொடர்பாளர் தல்ஜித்சிங் சீமா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆபரேஷன் புளு ஸ்டார் பிரச்னையில் உள்ள உண்மையான சதி அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கர்னெய்ல்சி்ங் பீர் முகம்மது கூறுகையில் வரும் 17-ம் தேதி புதுடில்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் முன் ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
ஆளும் அகாலிதள கட்சியை சேர்ந்த எம்.பி., நரேஷ்குஜ்ரால் கூறுகையில் இது சீக்கிய சமுகத்திற்கு குழப்பாக உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கூறியுள்ளார்.
மாஜி தளபதி மறுப்பு:
இந்த விவகாரம் குறித்து ஆபரேசன் புளு ஸ்டார் நடவடிக்கையினை நடத்திய முன்னாள் ராணுவ தளபதி கே.எஸ்.பிரார் கூறுகையில், ஆபரேசன் புளு ஸ்டார் நடத்தியதில் இங்கிலாந்தின் பங்கு இல்லை. இது முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையே என்றார்.
மத்தியஅரசு விளக்கம்:
இங்கிலாந்தில் வெளி்யிடப்பட்ட ஆவணம் குறித்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத்அக்பருதீன் கூறுகையில் அறிக்கைகள் மற்றும் உண்மையான தகவல்கள் இல்லாமல் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் இது சம்பந்தமாக இங்கிலாந்து அரசிடம் தகவல்கள் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.