RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் தான் நாட்டை ஆள வேண்டும்: மோடி

From: 'விஸ்தாரம்'

POST 115/1/2014, 9:52 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
காந்திநகர் : சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் தான் நாட்டை ஆள வேண்டும் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் கூட்டத்தில் மோடி உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கூட்டத்தில் மோடி பேசியதாவது:

21ம் நூற்றாண்டின் தொடககத்தில் இருந்து நாட்டில் தொழில்துறை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது;

புதிய நூற்றாண்டை எட்ட உள்ள நிலையிலும் இலக்கு எட்டப்படவில்லை;

தொழில்துறையில் அரசியல் தலைவர்கள் தலையிடக் கூடாது; அவர்கள் நம்பிக்கையை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்;

தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை விட, மாணவர்களுக்கு படிப்பதில் ஆர்வத்தை தூண்ட வேண்டும், நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்; ஆனால் இந்தியாவில் அனைத்து துறையிலும் மந்த நிலையே காணப்படுகிறது;

உலகக்கோப்பையில் வெற்றி பெறுவது மட்டுமே நம்பிக்கையை தந்துள்ளது;

இந்தியாவில் சிறு தொழில்கள் மட்டுமே நம்பிக்கை அளிப்பதாக உள்ளது; ஒரு நம்பிக்கையான சூழ்நிலையே இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுகிறது;

குஜராத்தில் ஒவ்வொருவரும் தங்களின் உழைப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்; இந்த நம்பிக்கை நாடு முழுவதும் ஏற்பட வேண்டும்;

ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டின் வளர்ச்சி குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

மத்திய அரசு குறித்து அவர் பேசுகையில்,

கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தி உள்ளது;

வளர்ச்சிக்கான எந்தவொரு திட்டங்களையும் வகுக்கவில்லை;

வேளாண்மை துறையும், பொதுத்துறையும் மிகவும் முக்கியமானது; ஆனால் அவற்றில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது;

நிலங்களை பெருக்க முடியாது; ஆனால் வளர்ந்து வரும் மக்கள்தொகையை குறைக்க முடியும்; நாட்டின் வளர்ச்சியிலோ, வேலை வாய்ப்பிலோ எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை;

நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தவறுகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை;

பாட்னாவில் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது நீங்கள் ஏன் ஓடவில்லை என என்னிடம் கேட்கின்றனர்;

ஓடிவிடுவதற்கு நான் தனி ஆள் இல்லை என அவர்களிடம் கூறினேன்; மத்திய அரசில் 4 பேர் இருந்து கொண்டு வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்;

முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர் மட்டுமே நாட்டை ஆள வேண்டும்; அது இல்லாத போது குழப்பம் மட்டுமே ஏற்படும்;

நாம் இறக்குமதிக்கு பல கோடிகளை செலவிட்டு வருகிறோம்; ஆனால் இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலை இல்லை;

இந்தியாவில் ராணுவ பலம் குறைவாக உள்ளது; பாதுகாப்பு இல்லாத நாடு எவ்வாறு செயல்பட முடியும்;

நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் முன்வேர வேண்டும்.

இவ்வாறு மோடி பேசி உள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT