நடிகர் விஜய், நடிகர் மோகன்லாலுடன் இணைந்து தான் நடித்து பொங்கலுக்கு வெளிவந்துள்ள ‘ஜில்லா’ படத்தின் வெற்றி நடிகை காஜல் அகர்வாலையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைய தளபதி விஜயுடன் தான் நடித்த ‘துப்பாக்கி’க்கு அடுத்து வந்த இந்தப் படமும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது குறித்து காஜல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்தப் படத்தில் இரு வேறு பெரிய நடிகர்களுடன் நடித்தது தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நல்ல கதையம்சம் கொண்டிருந்த இந்தப் படத்தின் தயாரிப்புக் குழுவினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடன் பணி புரிந்தது தனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தது என்றும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்திலும், தெலுங்குப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் கூறினார். ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் இணையும் வாய்ப்பு கை நழுவிப் போனபின் இப்போது அதற்கான வாய்ப்பு கூடிவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி இந்திப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிவித்த காஜல், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
நல்ல கதையம்சம் கொண்டிருந்த இந்தப் படத்தின் தயாரிப்புக் குழுவினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தினார்கள். இவர்களுடன் பணி புரிந்தது தனக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தது என்றும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்திலும், தெலுங்குப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளதாக அவர் கூறினார். ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் இணையும் வாய்ப்பு கை நழுவிப் போனபின் இப்போது அதற்கான வாய்ப்பு கூடிவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி இந்திப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளதாகத் தெரிவித்த காஜல், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.