RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஜனவரி 19, பிப்., 23ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

From: 'விஸ்தாரம்'

POST 119/1/2014, 4:39 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: நாடு முழுவதும் ஜனவரி 19ம் தேதியும், பிப்ரவரி 23ஆம் தேதியும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஜனவரி 19, பிப்., 23ல் போலியோ சொட்டு மருந்து முகாம் 18-pulse-polio2-600

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில்,கூறப்பட்டுள்ளதாவது:

''தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 19-1-2014 மற்றும் 23-2-2014 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/சத்துணவு மையங்கள்/பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 19, பிப்., 23ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரைசெயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும்குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.

முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின்குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின்வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT