ஆரம்பம் படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் நடித்துள்ள படம் வீரம். தமன்னா ஹீரோயின். இவர்களோடு விதார்த், பாலா, சந்தானம், நாசர், அப்புக்குட்டி, தம்பி ராமையா, ரமேஷ் கண்ணா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்ணன்-தம்பி பாசத்தை மையப்படுத்தியும், குடும்ப சூழலை பின்னணியாக கொண்டும் இப்படத்தை இயக்கியுள்ளார் சிவா. பொங்கல் விருந்தாக ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கும் வீரம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய இயக்குநர் சிவா, இதுநாள் வரை ஸ்டைலீஷ் மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வந்த அஜீத், அதிலிருந்து மாறுபட்டு வேஷ்டி-சட்டையில் கிராமத்து பின்னணியாக கொண்ட கதையில் நடித்துள்ளார். முற்றிலும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் கதை தான் வீரம் முழுவதும். இப்படத்தில் அன்பு, காதல், ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படமாக வீரம் உருவாகியுள்ளது. வீரம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை சொல்ல வருகிறது. ஜனவரி 10ம் தேதி படம் ரிலீசாகிறது என்றார்.
மேலும் அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய சிவா, பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர். சாதாரண நடிகர் போல எல்லோரிடமும் நன்கு பழக கூடியவர். தலைக்கனம் இல்லாதவர் என்று கூறியுள்ளார்.
அப்போது பேசிய இயக்குநர் சிவா, இதுநாள் வரை ஸ்டைலீஷ் மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வந்த அஜீத், அதிலிருந்து மாறுபட்டு வேஷ்டி-சட்டையில் கிராமத்து பின்னணியாக கொண்ட கதையில் நடித்துள்ளார். முற்றிலும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் கதை தான் வீரம் முழுவதும். இப்படத்தில் அன்பு, காதல், ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படமாக வீரம் உருவாகியுள்ளது. வீரம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை சொல்ல வருகிறது. ஜனவரி 10ம் தேதி படம் ரிலீசாகிறது என்றார்.
மேலும் அஜீத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய சிவா, பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர். சாதாரண நடிகர் போல எல்லோரிடமும் நன்கு பழக கூடியவர். தலைக்கனம் இல்லாதவர் என்று கூறியுள்ளார்.