சென்னை: அம்பேத்கர் சிலையின் பெயரால் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபடுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மிகவும் கவலையளிக்கின்றன. பதற்றத்தை தூண்டி, அசாதாரண சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளன.
அம்பேத்கர் சிலையின் பெயரால் வன்முறை: திமுக- வி. சிறுத்தைகள் மீது ராமதாஸ் காட்டம்
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்த பாட்டாளி மக்கள் கட்வி தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ம.க. வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வன்முறையில் தூண்டி விடுகின்றன. பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தும் வன்முறை கும்பல்கள், அதனால் ஏற்படும் பதற்றத்தை பயன்படுத்தி பா.ம.க. கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, விளம்பர பதாகைகளை சேதப்படுத்துவது, பிரச்சாரத்திற்கு செல்லும் பா.ம.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் மிகவும் கவலையளிக்கின்றன. பதற்றத்தை தூண்டி, அசாதாரண சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளன.
அம்பேத்கர் சிலையின் பெயரால் வன்முறை: திமுக- வி. சிறுத்தைகள் மீது ராமதாஸ் காட்டம்
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்த பாட்டாளி மக்கள் கட்வி தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பா.ம.க. வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக வன்முறையில் தூண்டி விடுகின்றன. பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்தும் வன்முறை கும்பல்கள், அதனால் ஏற்படும் பதற்றத்தை பயன்படுத்தி பா.ம.க. கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, விளம்பர பதாகைகளை சேதப்படுத்துவது, பிரச்சாரத்திற்கு செல்லும் பா.ம.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன.