புதுச்சேரி: 'தனி ராஜ்யம்' நடத்துவதாக தம் மீது புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகளை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா நிராகரித்துள்ளார்.
புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி, என் மீது புகார்களை கூறி பேசியதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் 239-வது பிரிவின்படி துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பொதுமக்கள் நலன் கருதியே நான் செயல்படுகிறேன்.
மோதல் முற்றுகிறது.. புதுவை முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆளுநர்
நான் பதவி ஏற்ற போது, புதுவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அனைத்து தரப்பு மக்களும் புகார் கூறினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மவுனமாக இருந்தனர். இதனால், மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்பட நான் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்தேன்.
எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான நிர்வாகத்தை நடத்தவும் முயற்சித்தால், அது போட்டி அரசாங்கம் நடத்துவதாகுமா?
எனது அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் மாதக்கணக்கில் திருப்பி அனுப்பப்படவில்லை எனக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் முடங்கின எனக் கூறப்படுவதும் பொய்யானதாகும்.
புதுவை துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி, என் மீது புகார்களை கூறி பேசியதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் 239-வது பிரிவின்படி துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பொதுமக்கள் நலன் கருதியே நான் செயல்படுகிறேன்.
மோதல் முற்றுகிறது.. புதுவை முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆளுநர்
நான் பதவி ஏற்ற போது, புதுவையில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அனைத்து தரப்பு மக்களும் புகார் கூறினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மவுனமாக இருந்தனர். இதனால், மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்பட நான் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்தேன்.
எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், நேர்மையான நிர்வாகத்தை நடத்தவும் முயற்சித்தால், அது போட்டி அரசாங்கம் நடத்துவதாகுமா?
எனது அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் மாதக்கணக்கில் திருப்பி அனுப்பப்படவில்லை எனக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் முடங்கின எனக் கூறப்படுவதும் பொய்யானதாகும்.