டெல்லி: நாட்டை விற்பதை விட டீ விற்பது மேலானது என்று காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யரின் கருத்துக்கு பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு பதில் அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் மணி சங்கர் அய்யர் பேசுகையில், மோடி பிரதமர் ஆக முடியாது. வேண்டும் என்றால் அவர் இங்கே டீ விற்கட்டும். அதற்கு நாம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என்றார்.
நாட்டை விற்பதை விட டீ விற்பதே மேல்: அய்யருக்கு வெங்கய்யா நாயுடு பதில்
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று டெல்லியில் கூறுகையில்,
டீ விற்பவர்களை எப்படி கிண்டல் செய்யலாம்? இது சுயமரியாதை விஷயம் ஆகும். நாட்டை விற்பதை விட டீ விற்பது எப்பொழுதுமே மேல். மக்கள் நாட்டை ஆண்டு அழித்திருக்கிறார்கள். ஊழல் மூலம் நாட்டை விற்க முயன்றுள்ளனர். அதனால் டீ விற்ற சாதாரண பின்னணியில் இருந்து வந்தவரை பாராட்ட வேண்டும் என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் மணி சங்கர் அய்யர் பேசுகையில், மோடி பிரதமர் ஆக முடியாது. வேண்டும் என்றால் அவர் இங்கே டீ விற்கட்டும். அதற்கு நாம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என்றார்.
நாட்டை விற்பதை விட டீ விற்பதே மேல்: அய்யருக்கு வெங்கய்யா நாயுடு பதில்
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று டெல்லியில் கூறுகையில்,
டீ விற்பவர்களை எப்படி கிண்டல் செய்யலாம்? இது சுயமரியாதை விஷயம் ஆகும். நாட்டை விற்பதை விட டீ விற்பது எப்பொழுதுமே மேல். மக்கள் நாட்டை ஆண்டு அழித்திருக்கிறார்கள். ஊழல் மூலம் நாட்டை விற்க முயன்றுள்ளனர். அதனால் டீ விற்ற சாதாரண பின்னணியில் இருந்து வந்தவரை பாராட்ட வேண்டும் என்றார்.