சென்னை: பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் சுய விளம்பரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுவதாக மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது, " பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் சுய விளம்பரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார்.
கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் துறைமுகத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருமுறை பள்ளிக் குழந்தைகள் துறைமுகத்தை இலவசமாக பார்வையிடலாம்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருக்க வரும் 27ஆம் தேதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும்" என்று வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது, " பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் சுய விளம்பரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாடகமாடுகிறார்.
கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் துறைமுகத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருமுறை பள்ளிக் குழந்தைகள் துறைமுகத்தை இலவசமாக பார்வையிடலாம்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மீண்டும் நடக்காமல் இருக்க வரும் 27ஆம் தேதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும்" என்று வாசன் கூறியுள்ளார்.