RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் மீண்டும் கோளாறு.. மின் உற்பத்தி பாதிப்பு

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:07 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் கோளறு ஏற்பட்டுள்ளதால் 210மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் மீண்டும் கோளாறு.. மின் உற்பத்தி பாதிப்பு 25-tuticorin-thermal-power-station-300-jpg

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் ஏற்பட்ட தொடர் பழுது காரணமாக கடந்த நவம்பர் 26முதல் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சுமார் 6கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த 55தினங்களுக்கு பின்பு கடந்த (20&1&14)20ஆம் தேதி 3வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 3வது அலகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இன்று மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது இயந்திர கோளாறு சரிசெய்யும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் மின் உற்பத்தி துவங்கும் எனத்தெரிவித்தனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT