RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆப்பிரிக்க பெண் புகார்: டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு சோம்நாத் பார்தி ஆஜராகவில்லை

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:09 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று ஆஜராகவில்லை.

ஆப்பிரிக்க பெண் புகார்: டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு சோம்நாத் பார்தி ஆஜராகவில்லை 25-somnath-bharti-600-jpg

டெல்லி மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையில் சென்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் சில ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி டெல்லி மாநில பெண்கள் ஆணைய தலைவர் பர்கா சிங், சோம்நாத் பார்திக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார்.

ஆனால், சோம்நாத் பார்தி டெல்லி பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. அவருக்கு அவசர பணிகள் இருப்பதாக கூறி வழக்கறிஞர்கள் சிலரை அனுப்பி வைத்தார். வழக்கறிஞர்கள் ஆஜர் ஆவதை ஏற்றுக்கொள்ள பர்கா சிங் மறுத்ததால், அவர்களுக்கு இடைய சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.

அமைச்சர் சோம்நாத் பார்தி மீதான புகார் குறித்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு ஆலோசனை நடத்தி, நீதி விசாரணை முடிவடைந்த பின்னரே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெண்கள் ஆணையம் முன்பு ஆஜர் ஆவதை சோம்நாத் பார்தி தவிர்த்துவிட்டார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT