RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

கொங்குநாடு முன்னேற்ற கழகம் மீண்டும் உடைந்தது!!

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:38 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
கோயம்புத்தூர்: பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மீண்டும் உடைந்துள்ளது. பொதுச்செயலராக இருந்த நாகராஜ் அந்த அமைப்பில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கொங்குநாடு முன்னேற்ற கழகம் 2009-ம் ஆண்டு உருவானது. இதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி. பொதுச்செயலாளராக ஈஸ்வரன் பணியாற்றினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஈஸ்வரன் தலைமையில் கடந்த ஆண்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொ.மு.தே.க.) உருவானது.

ஈஸ்வரன் பிரிந்து சென்ற பிறகு கொ.மு.க. பொதுச்செயலாளராக ஜி.கே.நாகராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் நாகராஜூக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்தது. நாகராஜை கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கியும்விட்டதாக ராமசாமி அறிவித்தார். ஆனால் நாகராஜ் தொடர்ந்தும் கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில் இன்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், தாம் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாகவும் 2 நாளில் புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT