சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோவை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் முரளிதர்ராவ் இன்று சென்னையில் சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இரு கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தேசிய செயலர் முரளிதரராவ் இன்று சென்னை வருகை தந்தார். அவர் மதிமுக தலைமையகமான தாயகம் சென்று வைகோவை சந்தித்தார்.
இருவரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இரு கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தேசிய செயலர் முரளிதரராவ் இன்று சென்னை வருகை தந்தார். அவர் மதிமுக தலைமையகமான தாயகம் சென்று வைகோவை சந்தித்தார்.
இருவரும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பாஜக கூட்டணியில் மதிமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.