RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

அழகிரி நீக்கத்தால் திமுகவிற்கு பாதிப்பில்லை: கருணாநிதி

From: 'விஸ்தாரம்'

POST 126/1/2014, 10:57 am

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. என்ற கப்பலை செலுத்துவதே புயலுக்கும், சூறாவளிக்கும் இடையே தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் பேரவை சார்பில் 36வது ஆண்டு இசை விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவ்வை நடராஜனுக்கு இயல் செல்வம் விருதும், கோவில் கண்ணாபம்பூர் கே.நடராஜனுக்கு ராஜரத்னா விருதும், நித்யஸ்ரீ மகாதேவனுக்கு இசை செல்வம் விருதும், திருக்காட்டுப்பள்ளி டி.ஜெ.சுப்பிரமணியனுக்கு நாதஸ்வர செல்வம் விருதும், கே.சண்முகசுந்தரத்திற்கு நாட்டிய செல்வம் விருதும், கோவிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரத்திற்கு தவில் செல்வம் விருதும் வழங்கப்பட்டது. விருதுகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''36 ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டு உள்ளேன். பெரிய சூறாவளிக்கு மத்தியில் நான் இங்கு வந்து இருப்பதாக சிலர் குறிப்பிட்டனர். தி.மு.க. இயக்கம் என்ற கப்பலை செலுத்துவதே புயலுக்கும், சூறாவளிக்கும் இடையில் தான்.

புயல், சூறாவளி வீசினாலும், பூகம்பம் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் என் கடமையை, பொறுப்பை நிறைவேற்றி தர வேண்டும் என்ற நிலையிலேயே இருக்கிறேன். அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்.

நாட்டுப்புற கலைகளை வளர்க்க நான் முயற்சி செய்தாலும், மறுபக்கம் சாய்க்கவே முயற்சி செய்கிறார்கள். எந்த கலையானாலும் தமிழரின் நல்வாழ்விற்கு உருவான கலை என்று பணியாற்ற வேண்டும். கலைகளை போற்ற வேண்டும். இன்றைக்கு ராவணன் என்ற பெயர் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிற முற்போக்கு சிந்தனை வந்திருக்கிறது என்றால் அதற்கு தந்தை பெரியார் தான் காரணம்'' என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,மு.க.அழகிரி நீக்கத்தால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அழகிரி மீதான நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை பாதிக்காது என்றார். மேலும், தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி அழகிரிக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT