புதுடில்லி: ராஜிவ் படுகொலை வழக்கு மற்றும் வீரப்பன் கூட்டாளிகள் தொடர்பான வழக்குகளில் புதிதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், புது விசாரணை நடத்தும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது தீர்ப்பு வழங்க,ஜனாதிபதி, ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக கூறி, ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில், புதிதாக ஆதாரம் கிடைத்துள்ளதால், மீண்டும் புதிதாக விசாரணையை கோரப்பட்டது.
அதே போல், ராஜிவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரி சமீபத்தில் விடுத்த அறிக்கையில்,"இவ்வழக்கில் குற்றமசாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, இந்த ஆதாரத்தின் அடிப்படையில்,புதிதாக விசாரணை நடத்தும்படி ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இருமனுக்களும், தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை அனுமதிக்க முடியாது. இந்த மனுக்களை, ஆதரித்தால் ஒவ்வொரு வழக்கிலும், இதே போன்று கோரிக்கை வைக்க முன் வருவர். மேலும் மோசமான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே , மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது.
எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது தீர்ப்பு வழங்க,ஜனாதிபதி, ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக கூறி, ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில், புதிதாக ஆதாரம் கிடைத்துள்ளதால், மீண்டும் புதிதாக விசாரணையை கோரப்பட்டது.
அதே போல், ராஜிவ் கொலை வழக்கில், விசாரணை அதிகாரி சமீபத்தில் விடுத்த அறிக்கையில்,"இவ்வழக்கில் குற்றமசாட்டப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, இந்த ஆதாரத்தின் அடிப்படையில்,புதிதாக விசாரணை நடத்தும்படி ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இருமனுக்களும், தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை அனுமதிக்க முடியாது. இந்த மனுக்களை, ஆதரித்தால் ஒவ்வொரு வழக்கிலும், இதே போன்று கோரிக்கை வைக்க முன் வருவர். மேலும் மோசமான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே , மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாது.
எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.