பீஜிங்: சீனாவின், ஜிங்ஷான் பகுதியில் உள்ள பள்ளியின் முதல்வர் கியூ யூ இது குறித்து கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், பனி காலங்களில், பனி மூட்டம் கடுமையாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில், பீஜிங் நகராட்சி, பள்ளிகளை மூட உத்தரவிடுகிறது. ஓரிரு தினங்கள் முதல், ஒரு மாதம் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பாடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையைத் தவிர்க்க, பள்ளிகள் மூடப்படும் காலங்களில், மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தவாறு, ஆன் லைன் மூலம், கல்வி கற்பதற்கான புதிய முறையை, அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் பள்ளியில், 3,000 மாணவர்கள் உள்ளனர்; சோதனை ரீதியாக, கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆன் லைன் வகுப்பில், 15 ஆசிரியர்களும், 400 மாணவர்களும் பங்கேற்றனர். ஆசிரியர் நடத்தும் பாடத்தை, கம்ப்யூட்டர் திரையில் காணும் மாணவர்கள், தங்கள் சந்தேகங்களை, கேட்கும் வசதி இல்லாததால், கம்ப்யூட்டரில், டைப் செய்து கேட்டுக் கொள்ளலாம். இந்த வசதியால், ஆசிரியர்கள் வேகமாக பாடங்களை முடிக்க முடியும். இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.