சென்னை: சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த வழியும் கண்டுபிக்கவில்லையே என நடிகர் - இயக்குநர் பார்த்திபன் ஆதங்கப்பட்டார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகான நடித்துள்ள ‘சலீம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியதிலிருந்து...
"அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த மெஷின் மூலம் ஒரு 10 ஆயிரம் பேரைப் பிடித்தார்கள்.
அதேபோல் ஜப்பானில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு அது 8 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. ரஷ்யாவில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு 1000 பேரை பிடித்துக் கொடுத்தது.
கடைசியாக இந்தியாவில் கொண்டுவந்து அந்த மெஷினை வைத்தார்கள். இங்கு அந்த மெஷினையே திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.
அதுதான் இங்கு சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதைத் திருட்டு விசிடி போட்டு சினிமாவை காலி பண்ணுகிறார்கள்.
சினிமாவை அழிப்பதற்குண்டான ஏகப்பட்ட வழிகளை இங்கே உள்ளவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, சினிமாவை காப்பாற்ற யாரும் எந்த வழியையும் கண்டுபிடிப்பதில்லை. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படுமா என்று தெரியவில்லை," என்றார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகான நடித்துள்ள ‘சலீம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியதிலிருந்து...
"அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஒரு மெஷினை கண்டுபிடித்து வைத்தார்கள். அந்த மெஷின் மூலம் ஒரு 10 ஆயிரம் பேரைப் பிடித்தார்கள்.
அதேபோல் ஜப்பானில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு அது 8 ஆயிரம் பேரை பிடித்துக் கொடுத்தது. ரஷ்யாவில் கொண்டுபோய் அந்த மெஷினை வைத்தார்கள். அங்கு 1000 பேரை பிடித்துக் கொடுத்தது.
கடைசியாக இந்தியாவில் கொண்டுவந்து அந்த மெஷினை வைத்தார்கள். இங்கு அந்த மெஷினையே திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.
அதுதான் இங்கு சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறோம். அதைத் திருட்டு விசிடி போட்டு சினிமாவை காலி பண்ணுகிறார்கள்.
சினிமாவை அழிப்பதற்குண்டான ஏகப்பட்ட வழிகளை இங்கே உள்ளவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே தவிர, சினிமாவை காப்பாற்ற யாரும் எந்த வழியையும் கண்டுபிடிப்பதில்லை. இதுக்கெல்லாம் ஒரு தீர்வு காணப்படுமா என்று தெரியவில்லை," என்றார்.