RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

நாடாளுமன்ற சபாநாயகராக 'அக்கா' தேர்வு: எம்பிக்களுக்கு மகிழ்ச்சி

From: 'விஸ்தாரம்'

POST 16/6/2014, 6:37 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்புக்குறிய 'அக்கா' சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் எம்.பிக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாஜக கட்சியிலிருந்து தொடர்ந்து எட்டுமுறை எம்.பியான சுமித்ரா மகாஜனை எம்.பிக்கள் அக்கா என்றுதான் சொல்லி அழைப்பது வழக்கம். மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவை தொகுதியில் இருந்து 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அடுத்தடுத்த நாடாளுமன்ற தேர்தல்களில் சுமித்ரா மகாஜன் எம்.பியாக பதவி வகித்து வருகிறார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1999 முதல் 2004வரை மத்திய இணை அமைச்சராக பணியாற்றி, மனிதவளம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம் போன்ற துறைகளை கையாண்ட அனுபவம் மிக்கவர். வக்கீலாக இருந்து அரசியல்வாதியாக மாறியதால் அரசியல் சாசனம் குறித்த அறிவு இவருக்கு அத்துபடி. இப்போது நடந்த தேர்தலில் 4.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எட்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு வந்தாலும்கூட இவர் யாரிடமும் அதிர்ந்து கூட பேசுவதில்லை. அனைவரிடமும் கனிவோடு நடந்துகொள்ளுவாராம்.

71 வயதான சுமித்ரா மகாஜன் மூத்த உறுப்பினர் என்பதால், அவரைவிட வயதில் இளைய எம்.பிக்கள் அனைவரும் 'சுமித்ரா தாய்' என்றுதான் மராத்தியில் அழைப்பது வழக்கம். அதாவது 'தாய்' என்றால் மராத்தியில் அக்கா என்று பொருள். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால் மராத்தியில் இவ்வாறு அவரை அழைப்பார்கள். இப்போது தங்கள் பாசத்துக்குறிய அக்கா சபாநாயகராகியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பல எம்.பிக்கள் தெரிவித்தனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் நாடாளுமன்ற எம்.பிக்கள் பெயர் பட்டியலில் கூட 'சுமித்ரா மகாஜன் (தாய்)' என்றுதான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT