சென்னை: உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.
இதனால் அவர் இன்னொரு படமான உத்தம வில்லனுக்குப் போய்விட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துவிட்டது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது.
அந்தப் படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்துதான் விஸ்வரூபம் படம் வெளியாகிறதாம். இதனை கமல்ஹாஸனே உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் கொஞ்சம் பணிகள் பாக்கியிருக்கிறன, என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.
இதனால் அவர் இன்னொரு படமான உத்தம வில்லனுக்குப் போய்விட்டார். அந்தப் படத்தின் ஷூட்டிங் பெருமளவு முடிந்துவிட்டது. வரும் செப்டம்பர் 10-ம் தேதி உத்தம வில்லன் படம் வெளியாகிறது.
அந்தப் படம் வெளியாகி 2 மாதங்கள் கழித்துதான் விஸ்வரூபம் படம் வெளியாகிறதாம். இதனை கமல்ஹாஸனே உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் கொஞ்சம் பணிகள் பாக்கியிருக்கிறன, என்று தெரிவித்துள்ளார்.