நியூயார்க்: அமெரிக்காவில், பனிப்புயல் காரணமாக, 2,200 விமானங்கள், ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள பல மாகாணங்களில், நேற்று முன்தினம் முதல், கடும் பனிப்புயல் வீசி வருகிறது. நியூயார்க் நகரில், மைனஸ், 13 டிகிரி செல்சியசாக வானிலையில் பதிவாகி உள்ளது.
இதனால், 10 20 செ.மீ., வரை பனிப்பொழிவும், மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் பனிப்புயல் வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்புயல் காரணமாக, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்பட இருந்த, 2,200 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரு கியூமோ, அவசர கால தகவல் மையம் துவங்கி வைத்தார். மேலும், பொது மக்களை வெளியே வர வேண்டாம் எனவும், அமெரிக்க அரசு எச்சரித்து உள்ளது.
இதனால், 10 20 செ.மீ., வரை பனிப்பொழிவும், மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் பனிப்புயல் வீசும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்புயல் காரணமாக, உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்பட இருந்த, 2,200 விமானங்களின் சேவைகளை ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரு கியூமோ, அவசர கால தகவல் மையம் துவங்கி வைத்தார். மேலும், பொது மக்களை வெளியே வர வேண்டாம் எனவும், அமெரிக்க அரசு எச்சரித்து உள்ளது.