மும்பை:
ரஞ்சி கோப்பை தொடரில் வர்ணனையாளராக கவாஸ்கர் அறிமுகமாகிறார். தனது மகன் ரோகனுடன் சேர்ந்து போட்டிகளை வர்ணிக்க உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 64. ஓய்வுக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால்,ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்ததில்லை.
இந்நிலையில் வரும் ஜன., 8ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கும் ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதியில் மும்பை, மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் வர்ணனையாளராக கவாஸ்கர் அறிமுகமாக உள்ளார்.
தனது மகன் ரோகனுடன் சேர்ந்து முதன்முறையாக வர்ணனை செய்ய உள்ளார். முன்னாள் இந்திய வீரர்களான சிவராமகிருஷ்ணன், சந்திரசேகர், விவேக் ரஸ்தான் ஆகியோரும் வர்ணனை செய்ய உள்ளனர்.
ரஞ்சி கோப்பை தொடரில் வர்ணனையாளராக கவாஸ்கர் அறிமுகமாகிறார். தனது மகன் ரோகனுடன் சேர்ந்து போட்டிகளை வர்ணிக்க உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 64. ஓய்வுக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றினார். ஆனால்,ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்ததில்லை.
இந்நிலையில் வரும் ஜன., 8ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்கும் ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதியில் மும்பை, மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியின் வர்ணனையாளராக கவாஸ்கர் அறிமுகமாக உள்ளார்.
தனது மகன் ரோகனுடன் சேர்ந்து முதன்முறையாக வர்ணனை செய்ய உள்ளார். முன்னாள் இந்திய வீரர்களான சிவராமகிருஷ்ணன், சந்திரசேகர், விவேக் ரஸ்தான் ஆகியோரும் வர்ணனை செய்ய உள்ளனர்.