சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னரே அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக கருதி பட்டாசு வெடித்த அதிமுக தொண்டர்கள் தற்போது பெரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்து. இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால் திடீரென தீர்ப்பு பகலுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது,.
இத்தகவல் வெளியான உடனே, ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது என கருதி சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடினர். மேலும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக கூறி முழக்கங்களையும் எழுப்பினர்.
ஆனால் பிற்பகல் 2.15 மணியளவில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உறுதியான தகவல் வெளியானதால் வாங்கி வைத்த பட்டாசுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு பெரும் சோகத்தில் மூழ்கிப் போகினர்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்து. இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ஆனால் திடீரென தீர்ப்பு பகலுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது,.
இத்தகவல் வெளியான உடனே, ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது என கருதி சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடினர். மேலும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக கூறி முழக்கங்களையும் எழுப்பினர்.
ஆனால் பிற்பகல் 2.15 மணியளவில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உறுதியான தகவல் வெளியானதால் வாங்கி வைத்த பட்டாசுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு பெரும் சோகத்தில் மூழ்கிப் போகினர்.