சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் நாளை காலை 11 மணியளவில் பதவியேற்க இருக்கிறார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதாவின் பதவி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் பறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புதிய முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. ஜெயலலிதா அரசில் அமைச்சரவையில் இருந்தோரில் பெரும்பாலானோர் அமைச்சர்களாக தொடருவார்கள் என்றே கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக ஜெயலலிதாவின் பதவி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் பறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை புதிய முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. ஜெயலலிதா அரசில் அமைச்சரவையில் இருந்தோரில் பெரும்பாலானோர் அமைச்சர்களாக தொடருவார்கள் என்றே கூறப்படுகிறது.