என்.எல்.சி., உள்ளிட்ட மத்திய மின் நிலையங்களில், பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை அடுத்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சார வினியோகம் சீராகியுள்ளது. இதனால், தமிழகத்தில், மின் தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு, மத்திய மின் தொகுப்புகளான ஆந்திராவின், ராமகுண்டம் மற்றும் சிம்மாதிரி அனல்மின் நிலையம், 909; ஒடிசா மாநிலம், தால்சர் அனல்மின் நிலையம், 503; கர்நாடகா மாநிலம், கைகா அணுமின் நிலையம், 227; என்.எல்.சி., 1,145; கல்பாக்கம் அணுமின் நிலையம், 250; வல்லூர், 750 என, மொத்தம், 3,865 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்.எல்.சி., மற்றும் கல்பாக்கம் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாகவும், வல்லூர், கைகா மின் நிலையங்களில் பழுதாலும், 1,350 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 2,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.தற்போது, மத்திய மின் நிலையங்களில், பராமரிப்பு பணி முடிவடைந்ததை அடுத்து, முழு அளவில் மின்சாரம் உற்பத்தி ஆவதால், தமிழகத்திற்கு, 3,000 - 3,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
மின் தேவை 12,141 மெகாவாட்:நேற்று, மின்சாரத்திற்கான தேவை, முதல் முறையாக, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. அனல்மின் நிலையங்கள், 3,270; நீர்மின் நிலையங்கள், 1,270; எரிவாயு நிலையங்கள், 310; காற்றாலைகள், 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மத்திய மின் நிலையங்கள், 2,840; வெளி மாநில மின் நிலையங்கள், 3,981 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதனால், மொத்த மின் உற்பத்தி, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. கடந்த அக்., 1ம் தேதி, மின் தேவை, 12,118 மெகாவாட்டாக இருந்தது. மின் உற்பத்தியும், இதே அளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று, மின் தேவை, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. உற்பத்தியும் இதே அளவில் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை; மின் தடை செய்யப்படவில்லை. நேற்று முன்தினம், மின் உற்பத்தி, 11,730; மின் பற்றாக்குறை, 910 மெகாவாட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு, மத்திய மின் தொகுப்புகளான ஆந்திராவின், ராமகுண்டம் மற்றும் சிம்மாதிரி அனல்மின் நிலையம், 909; ஒடிசா மாநிலம், தால்சர் அனல்மின் நிலையம், 503; கர்நாடகா மாநிலம், கைகா அணுமின் நிலையம், 227; என்.எல்.சி., 1,145; கல்பாக்கம் அணுமின் நிலையம், 250; வல்லூர், 750 என, மொத்தம், 3,865 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
என்.எல்.சி., மற்றும் கல்பாக்கம் மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாகவும், வல்லூர், கைகா மின் நிலையங்களில் பழுதாலும், 1,350 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 2,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.தற்போது, மத்திய மின் நிலையங்களில், பராமரிப்பு பணி முடிவடைந்ததை அடுத்து, முழு அளவில் மின்சாரம் உற்பத்தி ஆவதால், தமிழகத்திற்கு, 3,000 - 3,200 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
மின் தேவை 12,141 மெகாவாட்:நேற்று, மின்சாரத்திற்கான தேவை, முதல் முறையாக, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. அனல்மின் நிலையங்கள், 3,270; நீர்மின் நிலையங்கள், 1,270; எரிவாயு நிலையங்கள், 310; காற்றாலைகள், 470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. மத்திய மின் நிலையங்கள், 2,840; வெளி மாநில மின் நிலையங்கள், 3,981 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதனால், மொத்த மின் உற்பத்தி, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. கடந்த அக்., 1ம் தேதி, மின் தேவை, 12,118 மெகாவாட்டாக இருந்தது. மின் உற்பத்தியும், இதே அளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று, மின் தேவை, 12,141 மெகாவாட்டாக அதிகரித்தது. உற்பத்தியும் இதே அளவில் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை; மின் தடை செய்யப்படவில்லை. நேற்று முன்தினம், மின் உற்பத்தி, 11,730; மின் பற்றாக்குறை, 910 மெகாவாட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.