சென்னை: இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும் என்று திருச்சி மாநில மாநாட்டுக்கு திமுக தொண்டர்களை அழைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக ஏற்கனவே திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் கருணாநிதி.
தற்போது 2வது கடித அறிக்கையை அவர் திமுகவினருக்கு வெளியிட்டுள்ளார். அதில் மேலும் பல பழைய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கருணாநிதியின் அறிக்கை...
கடந்த ஞாயிறு அன்று கழகத்தின் மாநில மாநாடுகள் எவ்வெப்போது நடைபெற்றன என்பது குறித்தும், அந்த நாடுகள் எங்கே, யார் தலைமையில் நடைபெற்றன என்பது குறித்தும், திருச்சியில் நடைபெறவிருக்கும் பத்தாவது மாநில மாநாடு பற்றியும் எழுதத் தொடங்கியதைப் படித்திருப்பாய்!
திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் கழகம் தேர்தல்களில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று மாநாட்டில் வாக்குப் பெட்டிகள் வைத்து, மாநாட்டிற்கு வந்திருந்தோரின் கருத்து அறிந்து ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப் பட்ட கழக வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போது அதே திருச்சியில் நடைபெறவிருக்கின்ற பத்தாவது மாநில மாநாடு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு நடைபெறவிருப்பது பற்றியும் விளக்கியிருந்தேன்.
1949ஆம் ஆண்டு பிறந்த கழகம் தன்னுடைய முதல் மாநில மாநாட்டை 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடத்தியது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா; அதற்கு முன்பு 1951 நவம்பர் 17ஆம் தேதியன்று காலையில் மதுரையில் பொதுக்குழு உறுப்பினர் களின் கூட்டம் நடைபெற்றது. தற்போது சில கட்சிகளின் செயற்குழுவும், பொதுக்குழுவும் மாலை 3 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறதல்லவா? அப்போது முதல்நாள் காலையில் கூடிய தி.மு.கழகத்தின் பொதுக்குழு மறுநாள் காலையிலேதான் முடிவுற்றது.
இதுதொடர்பாக ஏற்கனவே திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் கருணாநிதி.
தற்போது 2வது கடித அறிக்கையை அவர் திமுகவினருக்கு வெளியிட்டுள்ளார். அதில் மேலும் பல பழைய நினைவுகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
கருணாநிதியின் அறிக்கை...
கடந்த ஞாயிறு அன்று கழகத்தின் மாநில மாநாடுகள் எவ்வெப்போது நடைபெற்றன என்பது குறித்தும், அந்த நாடுகள் எங்கே, யார் தலைமையில் நடைபெற்றன என்பது குறித்தும், திருச்சியில் நடைபெறவிருக்கும் பத்தாவது மாநில மாநாடு பற்றியும் எழுதத் தொடங்கியதைப் படித்திருப்பாய்!
திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் கழகம் தேர்தல்களில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று மாநாட்டில் வாக்குப் பெட்டிகள் வைத்து, மாநாட்டிற்கு வந்திருந்தோரின் கருத்து அறிந்து ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப் பட்ட கழக வரலாற்று நிகழ்வு பற்றியும், தற்போது அதே திருச்சியில் நடைபெறவிருக்கின்ற பத்தாவது மாநில மாநாடு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வருவதற்கு முன்பு நடைபெறவிருப்பது பற்றியும் விளக்கியிருந்தேன்.
1949ஆம் ஆண்டு பிறந்த கழகம் தன்னுடைய முதல் மாநில மாநாட்டை 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடத்தியது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா; அதற்கு முன்பு 1951 நவம்பர் 17ஆம் தேதியன்று காலையில் மதுரையில் பொதுக்குழு உறுப்பினர் களின் கூட்டம் நடைபெற்றது. தற்போது சில கட்சிகளின் செயற்குழுவும், பொதுக்குழுவும் மாலை 3 மணிக்குத் தொடங்கி 6 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறதல்லவா? அப்போது முதல்நாள் காலையில் கூடிய தி.மு.கழகத்தின் பொதுக்குழு மறுநாள் காலையிலேதான் முடிவுற்றது.