RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு- நாளை விடுமுறை அறிவிப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

From: 'விஸ்தாரம்'

POST 110/1/2014, 4:56 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு- நாளை விடுமுறை அறிவிப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்பு!! 10-1389351865-srirangam-sorga-vasal1-600

பூலோக வைகுண்டம் என்றும் 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 31-ந் தேதி நெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ந் தேதி பகல் பத்து விழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நாளை முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூல ஸ்தானத்திலிருந்து புறப்பாடு ஆகிறார்.

அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் (பரமபதவாசல்) திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 4.45 மணிக்கு திருக்கொட்டகை பிரவேசம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை நடைபெறுகிறது.

காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆசான மண்டபத்திற்கு நம்பெருமாள் வந்து எழுந்தருளுகிறார். 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு சேவை சேவிக்கிறார்.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரையர் சேவையும், பொது ஜன சேவையும் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார். நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவு பிறபித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 24 இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவும் பகலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT