டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய ஒருவர் மீது கொல்கத்தாவைச் சேர்ந்த பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி மீது பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது பெரும்பரப்பரை ஏற்படுத்தியது. மாதக் கணக்கில் நீடித்த இந்த சர்ச்சையின் முடிவாக மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி விலக நேரிட்டது.
ஏ.கே.கங்குலி ராஜினாமா செய்த ஓரிரு நாட்களிலேயே கொல்கத்தாவை சேர்ந்த மற்றொரு மாணவி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்து தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு புகார் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு வழக்கறிஞராக தான் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஒருவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இப்புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி மீது பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தது பெரும்பரப்பரை ஏற்படுத்தியது. மாதக் கணக்கில் நீடித்த இந்த சர்ச்சையின் முடிவாக மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி விலக நேரிட்டது.
ஏ.கே.கங்குலி ராஜினாமா செய்த ஓரிரு நாட்களிலேயே கொல்கத்தாவை சேர்ந்த மற்றொரு மாணவி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்து தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு புகார் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு வழக்கறிஞராக தான் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஒருவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இப்புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.