RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

ஆதாரம் இருந்தால் யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம்

From: 'விஸ்தாரம்'

POST 111/1/2014, 7:03 am

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
"காவல் துறையால் ஒருவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படாதபோதும், அந்த நபருக்கு எதிராக வழக்கு விசாரணையின்போது முகாந்திரம் இருப்பதாக விசாரணை நீதிமன்றம் கருதினால், அவரை மீண்டும் வழக்கில் சேர்க்கவோ விசாரணைக்கு அழைக்கவோ உத்தரவிட அதிகாரம் உண்டு' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆதாரம் இருந்தால் யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம் Sc

இத் தீர்ப்பின் மூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்படவில்லை எனக் கூறி சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள அனில் அம்பானி, அவரது மனைவி டீனா அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் வாதம் வலுவிழக்கும் என்று கருதப்படுகிறது.

10 பேர் மேல்முறையீடு: பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் தங்களுக்கு பல்வேறு வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் அனுப்பிய சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. போப்டே அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பு வருமாறு:

"இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 319-ஆம் பிரிவின்படி, காவல் துறை விசாரணையின் போதோ, குற்றப்பத்திரிகையிலோ ஒருவர் பெயர் சேர்க்கப்படாவிட்டாலும், அந்த நபருக்கு எதிராக குற்றம் இழைத்ததாக முகாந்திரம் இருப்பதாக விசாரணை நீதிமன்றம் கருதினால் அவரை விசாரணைக்கு அழைக்கவும் வழக்கில் சேர்க்கவும் உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள நீதிமன்றங்களுக்குத்தான் அக் கடமை இருக்கிறது.

எனவே, முதல் தகவல் அறிக்கையிலோ குற்றப்பத்திரிகையிலோ ஒருவர் விடுபட்டிருந்தாலோ அதைக் காரணமாகக் கூறி விசாரணைக்கு ஆஜராகத் தேவையில்லை என்று ஒருவர் கோர முடியாது.

உரிமைகளும் அதிகாரங்களும்: நீதிமன்றத்தில் ஆஜராகி ஒருவர் சாட்சியம் அளித்த பிறகு அவரது வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. அதே நபர் மீது மற்றொருவர் அளிக்கும் சாட்சியம் எதிராகத் திரும்புமானால், முதலில் வாக்குமூலம் அளித்த நபரை மீண்டும் விசாரணைக்கு உள்படுத்தவும் அவர் மீதான குற்றச்சாட்டைப் பதிவு செய்யவும் விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம்

உள்ளது.

"ஒரு வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்டால் அத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி கண்டனத்துக்கு ஆளாவார்' என்பதை குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி வலியுறுத்துகிறது. சட்டப் பிரிவு 319(1) என்பது நீதிமன்றத்துக்கான இப் பொறுப்பையும் கடமையையும் உறுதிப்படுத்துகிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தி வழக்கில் சேர்க்கப்படாதவர்களையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உள்ளது.

இதேபோல, குற்றவியல் தண்டனைச் சட்டம் 300(5), 398 ஆகிய பிரிவுகளின்படி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் உரிய விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கவும் விசாரணை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் விசாரணை தொடங்கிய பிறகு, பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டவரையும் அவரைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுபவர்களையும் விசாரிக்க சம்மன் அனுப்ப சில வேறுபாடுகள் உள்ளன. அத்தகைய நேரத்தில் கூடுதலாக வழக்கில் சேர்க்கப்படுபவருக்கு எதிராக புதிதாக விசாரணையைத் தொடங்கினால் விசாரணை தாமதமாகும்.

இந்த விஷயத்தில் விசாரணை நீதிமன்றம் திருப்தியடைந்தால் சம்மன் அனுப்ப உத்தரவிடும் அதிகாரம் அதற்கு உள்ளது' என்று அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.



« PREV  |  NEXT »



Associated with other topics

SIMILAR TOPICS IN OTHER WEBSITES WITH "ஆதாரம் இருந்தால் யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம்"

-

» என்னால் யாரையும் ரொமான்ஸ் செய்ய முடியும்: பிரியங்கா சோப்ரா
SPONSORED CONTENT