RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

தேமுதிகவிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஜெ. 'பொங்கல் பரிசு'!: அதிமுகவுக்கு அழைப்பு?

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 5:29 pm

விஸ்தாரம் நிருபர்
விஸ்தாரம் நிருபர்

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
சென்னை: தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேமுதிகவிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஜெ. 'பொங்கல் பரிசு'!: அதிமுகவுக்கு அழைப்பு? 13-panruti-ramachandran-new-60

தேமுதிகவிலிருந்து விலகிய அவருக்கு அதிமுக அரசு இந்த விருதை வழங்குவது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவிலிருந்து விலகியதால் அவருக்கு பாராட்டு தெரிவிப்பது போல 'பொங்கல் பரிசாக' இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திருவள்ளுவர், பெரியார், அண்ணா உள்ளிட்ட விருதுகள் பெறுவோர் விவரத்தை இன்று அறிவித்துள்ளது. இதில் தேமுதிக முன்னாள் அவைத் தலைவரும், அரசியல் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர விருதுகள்: சுலோச்சனா சம்பத்- பெரியார் விருது, தைவான் கவிஞர் யூசி- திருவள்ளுவர் விருது, முனைவர் பிரகாஷ்- அம்பேத்கர் விருது, அசோகமித்திரன்- திரு.வி.க. விருது, ஞானசம்பந்தன் - பாரதி விருது, ஜெயதேவன்- கி.ஆ.பெ. விருது, அய்யாறு வாண்டையார்- காமராசர் விருது. ராதா செல்லப்பன் - பாரதிதாசன் விருது

இந்த விருதுகள் வரும் 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். ரூ1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் விருதாக வழங்கப்பட இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரை அதிமுகவுக்கு அழைப்பது போலவே தெரிகிறது. அவரிடம் பேசிவிட்டே இந்த விருதை அறிவித்திருப்பார்கள் என்பதும் நிச்சயம். எனவே, விரைவில் பண்ருட்டியார் அதிமுகவில் இணைந்து அம்மா தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று பிரச்சாரத்தில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT