சென்னை: ஜெயலலிதா தற்போது முதல்வர் - இனியாவது கபட நாடகம், இரட்டை வேடம், பச்சோந்தி என்பன போன்ற வார்த்தைகளைக் கைவிட்டு நாகரிகமாக அறிக்கை விடவும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் முயற்சிப்பார் என்று நம்புகிறேன். இல்லையேல்,"அம்மா" அறிக்கையில் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் "அம்மா"வுக்கே பொருந்தும் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி:
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ? எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கொடநாட்டுக்கு ஆளுநர் மாற்றுவார்களோ...
23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே நடந்ததை, பழைய இடத்திற்கு மாற்றியதைப் போல, ஆளுநர் உரையைக்கூட கொட நாட்டிற்கு மாற்றுவார்களோ என்னவோ?
முதல்வர் பெயரில் வந்த அறிக்கை:
இந்த நிலையில் "சென்னை"யிலிருந்து வெளி வந்ததைப் போலக் குறிப்பிட்டு, முதல்வர் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் வரும் 20ஆம் தேதி இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்.
இதையேதான் நானும் சொன்னேன்:
இந்தச் செய்தியை; நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நான் சொன்னதின் பேரில், கடந்த மாதம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளை டெல்லியில் பிரதமரை 27.12.2013 அன்று சந்திக்க வைத்தபோதே, பிரதமர்; மீனவர் பிரதிநிதிகளிடமும், டி.ஆர். பாலுவிடமும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வாக்கில் இரண்டு நாட்டின் மீனவர்களின் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள் என்று பிரதமர் உறுதி கூறி, அந்தச்செய்தி அனைத்து ஏடுகளிலும் அப்போதே வெளிவந்து விட்டது. அந்தச் செய்தியைத்தான் பதினைந்து நாட்கள் கழித்து தமிழக முதல்வர் அறிக்கையாகத் தெரிவித்திருக்கிறார்.
படிக்கவி்ல்லையோ...
ஒருவேளை பிரதமர் அறிவித்த செய்தியை தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்த காரணத்தால் படிக்க வில்லையோ என்னவோ? எப்படியோ அந்தப் பேச்சுவார்த்தை நடை பெற்று, நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு மீனவர் களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து காவல் நீடிக்கப்பட்டு, அங்கே சிறையில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களும் அந்த அரசினால் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ராஜபக்சேவிடமிருந்து வந்ததா:
பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வர அது மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் முதல்வர், நிச்சயமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இன்றைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. மத்திய அரசிடமிருந்து வந்ததா? அல்லது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடமிருந்து நேரடியாக வந்ததா?
அதிமுக அரசு செய்த உதவிகள்:
முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் மீனவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த உதவிகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மீனவர்களுக்குச் செய்த உதவிகளை நினைவூட்ட வேண்டுமேயானால், கழக ஆட்சியில், மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - நிவாரணத் தொகை 1,200 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாக உயர்வு - மீனவ மகளிருக்கு 61 கோடியே 57 லட்சம் ரூபாய் நிவாரணம் - மீன் பிடிப்பு தடைக் காலத்தில் 14 கோடியே 33 இலட்ச ரூபாய் நிவாரணம் - உயிரிழக்க நேரிடும் மீனவர் குடும்பத் திற்கு நிவாரணம் 3 லட்சம் ரூபாயாக உயர்வு - மா. சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதித் திட்டத் தின்கீழ் 21 கோடியே 12 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு - 27 கோடி ரூபாய்ச் செலவில் குளச்சல் மற்றும் தேங்காய்பட்டினத்தில் மீன் பிடித் துறைமுகங்கள் - 50 கோடி ரூபாய்ச் செலவில் நாகை மாவட்டம் பூம்புகாரில் மீன் பிடித் துறைமுகம் - தமிழ்நாடு மீனவர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, 4 கோடியே 52 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி என்று நான் சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவையில்லாமல் விமர்சனங்கள்:
ஆனால் முதல்வர் விடுத்த அறிக்கையில் வழக்கம்போல என்னைப் பற்றியும் பல கண்டன விமர்சனங்களை தேவையில்லாமல் செய்திருக்கிறார். மீனவர் பிரச்சினை பற்றி 7-1-2014 அன்று முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக விடுத்த வேண்டுகோளைப் பற்றி நான் குறிப்பிடும்போது; "மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டு மென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி யிருப்பதாகவும், தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை" என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறாரே, அதற்கு முதல் அமைச்சரின் பதில் என்ன என்று நான் கேட்டதற்கு, "குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பதுபோல" என்ற பழமொழி அம்மை யாருக்கு நினைவிற்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி:
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ? எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கொடநாட்டுக்கு ஆளுநர் மாற்றுவார்களோ...
23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே நடந்ததை, பழைய இடத்திற்கு மாற்றியதைப் போல, ஆளுநர் உரையைக்கூட கொட நாட்டிற்கு மாற்றுவார்களோ என்னவோ?
முதல்வர் பெயரில் வந்த அறிக்கை:
இந்த நிலையில் "சென்னை"யிலிருந்து வெளி வந்ததைப் போலக் குறிப்பிட்டு, முதல்வர் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் வரும் 20ஆம் தேதி இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்.
இதையேதான் நானும் சொன்னேன்:
இந்தச் செய்தியை; நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நான் சொன்னதின் பேரில், கடந்த மாதம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளை டெல்லியில் பிரதமரை 27.12.2013 அன்று சந்திக்க வைத்தபோதே, பிரதமர்; மீனவர் பிரதிநிதிகளிடமும், டி.ஆர். பாலுவிடமும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வாக்கில் இரண்டு நாட்டின் மீனவர்களின் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள் என்று பிரதமர் உறுதி கூறி, அந்தச்செய்தி அனைத்து ஏடுகளிலும் அப்போதே வெளிவந்து விட்டது. அந்தச் செய்தியைத்தான் பதினைந்து நாட்கள் கழித்து தமிழக முதல்வர் அறிக்கையாகத் தெரிவித்திருக்கிறார்.
படிக்கவி்ல்லையோ...
ஒருவேளை பிரதமர் அறிவித்த செய்தியை தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்த காரணத்தால் படிக்க வில்லையோ என்னவோ? எப்படியோ அந்தப் பேச்சுவார்த்தை நடை பெற்று, நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டு மீனவர் களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து காவல் நீடிக்கப்பட்டு, அங்கே சிறையில் இருக்கும் அனைத்து இந்திய மீனவர்களும் அந்த அரசினால் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ராஜபக்சேவிடமிருந்து வந்ததா:
பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வர அது மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசின் சார்பில் முதல்வர், நிச்சயமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இன்றைய அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. மத்திய அரசிடமிருந்து வந்ததா? அல்லது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடமிருந்து நேரடியாக வந்ததா?
அதிமுக அரசு செய்த உதவிகள்:
முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் மீனவர்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த உதவிகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு மீனவர்களுக்குச் செய்த உதவிகளை நினைவூட்ட வேண்டுமேயானால், கழக ஆட்சியில், மே 2006 முதல் ஜனவரி 2011 வரை 88 கோடியே 57 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிவாரணம் - நிவாரணத் தொகை 1,200 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாக உயர்வு - மீனவ மகளிருக்கு 61 கோடியே 57 லட்சம் ரூபாய் நிவாரணம் - மீன் பிடிப்பு தடைக் காலத்தில் 14 கோடியே 33 இலட்ச ரூபாய் நிவாரணம் - உயிரிழக்க நேரிடும் மீனவர் குடும்பத் திற்கு நிவாரணம் 3 லட்சம் ரூபாயாக உயர்வு - மா. சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதித் திட்டத் தின்கீழ் 21 கோடியே 12 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு - 27 கோடி ரூபாய்ச் செலவில் குளச்சல் மற்றும் தேங்காய்பட்டினத்தில் மீன் பிடித் துறைமுகங்கள் - 50 கோடி ரூபாய்ச் செலவில் நாகை மாவட்டம் பூம்புகாரில் மீன் பிடித் துறைமுகம் - தமிழ்நாடு மீனவர் நல வாரியம் உருவாக்கப்பட்டு, 4 கோடியே 52 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி என்று நான் சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவையில்லாமல் விமர்சனங்கள்:
ஆனால் முதல்வர் விடுத்த அறிக்கையில் வழக்கம்போல என்னைப் பற்றியும் பல கண்டன விமர்சனங்களை தேவையில்லாமல் செய்திருக்கிறார். மீனவர் பிரச்சினை பற்றி 7-1-2014 அன்று முதல்வர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் வாயிலாக விடுத்த வேண்டுகோளைப் பற்றி நான் குறிப்பிடும்போது; "மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க வைக்க நாள் குறிப்பிட வேண்டு மென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி யிருப்பதாகவும், தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை" என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறாரே, அதற்கு முதல் அமைச்சரின் பதில் என்ன என்று நான் கேட்டதற்கு, "குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பதுபோல" என்ற பழமொழி அம்மை யாருக்கு நினைவிற்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.