நான் தான் கூட்டணி தலைவர்... செலவுக்கு நீங்கதான் பொறுப்பேற்பு..: கேப்டன் நிபந்தனையால் மிரண்ட பாஜக!!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமது தலைமையில்தான் பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றும் தேர்தலுக்கான முழு செலவையும் பாரதிய ஜனதா கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விதித்த நிபந்தனைகளால் பாரதிய ஜனதா கட்சி தூதர்கள் அலறிப் போய்கிடக்கிறார்களாம்.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் மெகா கூட்டணி அமைப்பதில் பாஜக மும்முரம்காட்டி வருகிறது. மதிமுக, பாமக வரவை உறுதி செய்திருக்கும் பாஜக, தேமுதிகவை வளைப்பதில் தீவிரம்காட்டியது.
இதன் முதல்கட்டமாக பாஜக மேலிட பிரதிநிதி முரளிதர்ராவ் அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் நிபந்தனைகளாக சுதீஷ் சொன்னவை கேட்டு முரளிதர்ராவ் அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.
அதாவது, தாமே கூட்டணியின் தலைவர், தாம்தான் பிற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வேன், வடதமிழகத்தில் தேமுதிகவே கணிசமாக போட்டியிடும். தேர்தலில் பாஜகதான் செலவை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகளாம்.
வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு நிபந்தனையை இதுவரை எதிர்கொள்ளாததால் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். இவ்வளவு செலவு செய்து 10 தொகுதிகளைப் பெறுவதற்கு இவ்வளவு தொகை கொடுத்து 20 எம்.பிக்களை விலைக்கு வாங்கிவிடலாமே என்றும் கிண்டலடித்தார்களாம் பாஜக மேலிட பிரதிநிதிகள்.
கேப்டன் விதித்த நிபந்தனை பாஜகவை ஓடவைக்கவா? ஒப்புக் கொள்ளவா? என்பது ஓரிருநாட்களில் தெரியும் என்றும் கண்சிமிட்டுகின்றனர் தேமுதிகவினர்.
சென்னை: லோக்சபா தேர்தலில் தமது தலைமையில்தான் பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்றும் தேர்தலுக்கான முழு செலவையும் பாரதிய ஜனதா கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விதித்த நிபந்தனைகளால் பாரதிய ஜனதா கட்சி தூதர்கள் அலறிப் போய்கிடக்கிறார்களாம்.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் மெகா கூட்டணி அமைப்பதில் பாஜக மும்முரம்காட்டி வருகிறது. மதிமுக, பாமக வரவை உறுதி செய்திருக்கும் பாஜக, தேமுதிகவை வளைப்பதில் தீவிரம்காட்டியது.
இதன் முதல்கட்டமாக பாஜக மேலிட பிரதிநிதி முரளிதர்ராவ் அண்மையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் நிபந்தனைகளாக சுதீஷ் சொன்னவை கேட்டு முரளிதர்ராவ் அதிர்ச்சியில் உறைந்து போனாராம்.
அதாவது, தாமே கூட்டணியின் தலைவர், தாம்தான் பிற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வேன், வடதமிழகத்தில் தேமுதிகவே கணிசமாக போட்டியிடும். தேர்தலில் பாஜகதான் செலவை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகளாம்.
வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு நிபந்தனையை இதுவரை எதிர்கொள்ளாததால் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம். இவ்வளவு செலவு செய்து 10 தொகுதிகளைப் பெறுவதற்கு இவ்வளவு தொகை கொடுத்து 20 எம்.பிக்களை விலைக்கு வாங்கிவிடலாமே என்றும் கிண்டலடித்தார்களாம் பாஜக மேலிட பிரதிநிதிகள்.
கேப்டன் விதித்த நிபந்தனை பாஜகவை ஓடவைக்கவா? ஒப்புக் கொள்ளவா? என்பது ஓரிருநாட்களில் தெரியும் என்றும் கண்சிமிட்டுகின்றனர் தேமுதிகவினர்.