புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, ராகுல் மற்றும் சோனியா போட்டியிடும் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்வார் என்று காங்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் ரேபெர்லி தொகுதியில் ராகுலும், சோனியாவும் போட்டியிட்டு தவறாமல் வெற்றி பெறுவது வழக்கம். இந்நிலையில் ராகுலை தோற்கடிப்பதே எங்கள் முதல் வேலை என ஆம் ஆத்மி களம் இறங்கியுள்ளது.
நேற்று கூட இந்த கட்சியின் நிர்வாகி குமார் விஸ்வாஸ் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஆதரவு பெருவாரியாக காணப்பட்டது. இங்கு அவர் பேசுகையில் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்றார். ராகுலை மட்டுமே கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில் காங்., செய்தி தொடர்பாளர் அஜய்மாக்கான் கூறியிருப்பதாவது: அமேதி, மற்றும் ரேபெர்லியில் பிரியங்கா பிரசாரம் செய்வார். வேறு எந்த தொகுதிக்கும் செல்ல மாட்டார் . ராஜஸ்தான் மாநில காங்., பொறுப்பாளராக சச்சின் பைலட் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி மற்றும் ரேபெர்லி தொகுதியில் ராகுலும், சோனியாவும் போட்டியிட்டு தவறாமல் வெற்றி பெறுவது வழக்கம். இந்நிலையில் ராகுலை தோற்கடிப்பதே எங்கள் முதல் வேலை என ஆம் ஆத்மி களம் இறங்கியுள்ளது.
நேற்று கூட இந்த கட்சியின் நிர்வாகி குமார் விஸ்வாஸ் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஆதரவு பெருவாரியாக காணப்பட்டது. இங்கு அவர் பேசுகையில் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்றார். ராகுலை மட்டுமே கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில் காங்., செய்தி தொடர்பாளர் அஜய்மாக்கான் கூறியிருப்பதாவது: அமேதி, மற்றும் ரேபெர்லியில் பிரியங்கா பிரசாரம் செய்வார். வேறு எந்த தொகுதிக்கும் செல்ல மாட்டார் . ராஜஸ்தான் மாநில காங்., பொறுப்பாளராக சச்சின் பைலட் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.