புதுடில்லி:''காங்கிரஸ் கட்சியினர், ஊழல்களுக்காக வெட்கப்படுவது இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; இந்த நாட்டு மக்களின் முழக்கம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.
கோவாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பங்கேற்ற, பிரமாண்ட பொதுக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மோடி பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர், ஊழலில் மூழ்கி விட்டனர். ஆனால், அந்த ஊழல்களுக்காக, இவர்கள் வெட்கப்படுவது இல்லை. இதனால் தான், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறோம். இது, பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; நாட்டு மக்களின் முழக்கம். உங்கள் (மக்கள்) பெற்றோர் வாழ்ந்த சிரமமான வாழ்க்கையை, நீங்களும் வாழ வேண்டுமா? அவர்கள் சிரமத்துக்கு காரணமானவர்கள், இந்த நாட்டை, 50 ஆண்டுகளாக ஆண்டு வரும், காங்கிரஸ்காரர்கள் தானே? அவர்களை தண்டிக்க வேண்டாமா? அவர்களுக்கு, மீண்டும் ஓட்டு போட வேண்டுமா? கடந்த, 10 ஆண்டுகளாக, நம் நாட்டில் நிலவி வரும், மோசமான சூழ்நிலையைப் போல், வேறு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. இதற்கு காரணம், காங்கிரஸ் தான். "ஜெயந்தி' வரிபா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சுரங்க ஒதுக்கீட்டில், வெளிப்படையான தன்மை பின்பற்றப்படும். வருமான வரி, விற்பனை வரி பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், "ஜெயந்தி' வரியைப் பற்றி, இப்போது தான், கேள்விப்படுகிறேன்.
"ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, பணம் கொடுத்தால் தான், கோப்புகள் நகரும்' என, சிலர் கூறினர். வாஜ்பாய், இந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். ஆனாலும், அவருக்கு, இன்னும் சொந்த வீடு இல்லை. மக்களுக்காக உழைப்பது மட்டுமே, பா.ஜ., தலைவர்களின் லட்சியம்.
ஓட்டு வங்கி அரசியல்:காங்., கட்சியினர், மதவாத அரசியல் நடத்துகின்றனர். மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யும் போது முஸ்லிம்கள் எனில் விலக்கு தேவை என, எழுதியுள்ளார். இதில், மதம் எங்கே வந்தது? சட்டத்தை மீறுபவர்களை, மதத்தை அடிப்படையாக வைத்து, கைது செய்வதும், விடுதலை செய்வதும், சரியான நடவடிக்கையா? இவ்வாறு, மோடி பேசினார்.
கோவாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பங்கேற்ற, பிரமாண்ட பொதுக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மோடி பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர், ஊழலில் மூழ்கி விட்டனர். ஆனால், அந்த ஊழல்களுக்காக, இவர்கள் வெட்கப்படுவது இல்லை. இதனால் தான், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறோம். இது, பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; நாட்டு மக்களின் முழக்கம். உங்கள் (மக்கள்) பெற்றோர் வாழ்ந்த சிரமமான வாழ்க்கையை, நீங்களும் வாழ வேண்டுமா? அவர்கள் சிரமத்துக்கு காரணமானவர்கள், இந்த நாட்டை, 50 ஆண்டுகளாக ஆண்டு வரும், காங்கிரஸ்காரர்கள் தானே? அவர்களை தண்டிக்க வேண்டாமா? அவர்களுக்கு, மீண்டும் ஓட்டு போட வேண்டுமா? கடந்த, 10 ஆண்டுகளாக, நம் நாட்டில் நிலவி வரும், மோசமான சூழ்நிலையைப் போல், வேறு எப்போதும் நிகழ்ந்தது இல்லை. இதற்கு காரணம், காங்கிரஸ் தான். "ஜெயந்தி' வரிபா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சுரங்க ஒதுக்கீட்டில், வெளிப்படையான தன்மை பின்பற்றப்படும். வருமான வரி, விற்பனை வரி பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், "ஜெயந்தி' வரியைப் பற்றி, இப்போது தான், கேள்விப்படுகிறேன்.
"ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, பணம் கொடுத்தால் தான், கோப்புகள் நகரும்' என, சிலர் கூறினர். வாஜ்பாய், இந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். ஆனாலும், அவருக்கு, இன்னும் சொந்த வீடு இல்லை. மக்களுக்காக உழைப்பது மட்டுமே, பா.ஜ., தலைவர்களின் லட்சியம்.
ஓட்டு வங்கி அரசியல்:காங்., கட்சியினர், மதவாத அரசியல் நடத்துகின்றனர். மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், கைது செய்யும் போது முஸ்லிம்கள் எனில் விலக்கு தேவை என, எழுதியுள்ளார். இதில், மதம் எங்கே வந்தது? சட்டத்தை மீறுபவர்களை, மதத்தை அடிப்படையாக வைத்து, கைது செய்வதும், விடுதலை செய்வதும், சரியான நடவடிக்கையா? இவ்வாறு, மோடி பேசினார்.