RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You are not connected. Please login or register

புதிய படங்களை கைப்பற்றுவதில் நயன்தாரா-தமன்னாவுக்கிடையே போட்டி!

From: 'விஸ்தாரம்'

POST 113/1/2014, 10:40 pm

விஸ்தாரக் கள்ளி

OUR PROMOTE PAGE



Visthaaram - News Channel...
தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளின் மார்க்கெட் சரிவடைந்ததால், தனது இரண்டாவது ரவுண்டை அமோகமாக ஆரம்பித்தார் நயன்தாரா. அவருக்கு நிகரான எதிரி நடிகைகள் யாரும் களத்தில் இல்லாததால் முதல் ரவுண்டில் தன்னுடன் நடித்த ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி வருகிறார்.

ஆனால் இந்த நேரம் பார்த்து, ஆரம்பம் படத்தின் மூலம் நயன்தாராவின் செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்து வைத்த அஜீத், அடுத்தபடியாக வீரம் படம் மூலம் தமன்னாவுக்கும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பதால், மேற்படி நடிகைகளுக்கிடையே புதிய படங்களை விரட்டிப்பிடிப்பதில் பலத்த போட்டி ஏறபட்டிருக்கிறது.

இதனால், அடுத்தடுத்து புதிய படங்களை தனக்கு வரவிடாமல் தமன்னா தடுத்து விடுவாரோ என்ற கலவரத்தில் இருக்கிறார் நயன்தாரா. அதையடுத்து, இதுவரை கதை சொல்ல வந்த டைரக்டர்களிடம் எக்கச்சக்கமாக பேசிவந்த நயன்தாரா, இப்போது வாயே திறக்காமல் கதை கேட்டு வருகிறார். அதோடு, என் கவர்ச்சிக்கும், திறமைக்கும் இன்னும் மார்க்கெட்டில் மவுசு உள்ளது. அதனால் என் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு கோடிகளை வெட்டுங்கள் என்று கூறி வந்த நயன்தாரா, இப்போது கரன்சி விசயத்தில் காரசாரமாக பேசுவதில்லையாம். எகிறி பேசினால், அடுத்தகனமே படங்கள் தமன்னா போன்ற நடிகைகளிடம் சிக்கி விடும் என்று முடிந்தவரை விட்டுக்கொடுத்தே படங்களை கைப்பற்றத் தொடங்கியிருக்கிறாராம்.

ஆக, ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நயன்தாரா-தமன்னாவுக்கிடையே திரைக்குப்பின்னால் படங்களை தங்கள் பக்கம் இழுப்பதில் ஒரு பெரும அக்கப்போரே நடந்து கொண்டிருப்பதாக அவர்களுடன் இருக்கும் அடிபொடிகள் சொல்கிறார்கள.



« PREV  |  NEXT »



Associated with other topics

SPONSORED CONTENT